1.0 பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! உரைநடை - 1 என்னும் பகுதியில், திரு.வி.க., மறைமலையடிகள் முதலான தமிழ்ச் சான்றோர்களின் உரைநடைச் சிறப்புகளைப் படித்திருப்பீர்கள். அந்தப் பாடங்களில் தமிழில் உரைநடையின் தோற்றம் குறித்தும் விரிவான செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

திரு.வி.க மறைமலையடிகள்

இந்தப் பாடத்தில் தமிழ் உரைநடையில் தனக்கென்று தனியிடம் பெற்றுள்ள டாக்டர். இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் உரைநடை குறித்து அறிந்து கொள்ளலாம்.