தமிழ் நாட்டில் தமிழில் எழுதுவோரும்
பேசுவோரும்
வடமொழிச் சொற்களை அதிக அளவில் கலந்து எழுதியும்.
பேசியும் வந்தனர். இதன் காரணமாகத் தமிழில் வடசொற்
கலப்பு மிகுதியானது. தமிழில் வடமொழிச் சொற்கள் நிறையக்
கலந்திருப்பது கண்டு ஒருசிலர் ‘வடமொழியின் துணையின்றி -
வடமொழிச் சொற்கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க இயலாது’
என்ற ஒரு தவறான கருத்தை ஒரு சில நூற்றாண்டுகளுக்கு
முன்பு உருவாக்கினர். ஆயின் பரிதிமாற் கலைஞர்,
மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர் பெருமக்கள் ‘தமிழ்
வடமொழிச் சொற்கலப்பின்றித் தனித்தியங்க வல்லது; எந்த
ஒரு கருத்தையும் வடமொழிச் சொற்களின் துணையின்றித்
தனித்தமிழ்ச் சொற்களைக் கொண்டே விளக்கிக் கூற முடியும்’
என்று கூறி, அத்தவறான கருத்தைப் போக்க முனைந்தனர்;
பாடுபட்டனர். மறைமலையடிகள் இந்த அரிய பணிக்காகத்
தனித்தமிழ் இயக்கம் என்ற
ஓர் இயக்கத்தைத்
தோற்றுவித்தார். அந்த இயக்கத்தில் தனியிடம்
வகித்த
பெருமையுடையவர் பாவாணர் ஆவார்.
மறைமலை
அடிகள் |
|
தேவநேயப் பாவாணர் |
பாவாணர் தமிழ்மொழியில் எழுதும்போது பிற
மொழிச்
சொற்களின் கலப்பின்றி எழுத முடியும் என்பதைத்
தன்
உரைநடையின் வழியே நிறுவிக் காட்டினார். இவ்வகையில்
பாவாணரின் உரைநடைத் தனித்தன்மை உடைய தனித்தமிழ்
நடையாகும். |