தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(4) | கண்ணதாசனின் படைப்புகள் குறித்துக் கவிஞர் மேத்தாவின் கருத்து ஒன்றைக் குறிப்பிடுக. |
கவிஞர் மேத்தா கண்ணதாசனின் கவிதையையும் உரைநடையையும் ஒப்பிட்டுப் புதுக்கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அவர் கண்ணதாசனை நோக்கி, இலக்குவன் போல் உன்னுடன் இருந்தது உரைநடை சீதை போல் உன்னைச் சேர்ந்தது கவிதை என்று பாடியுள்ளார். |