தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

கண்ணதாசனின் உரைநடைக் கொடைகளில் ஏதேனும் ஒன்றினை விளக்குக.

     வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் வருகின்ற போது வருந்தக் கூடாது என்பதை விளக்குமிடத்து, கண்ணதாசன்

   “கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது. மீண்டும் மழைக்காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது. அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது”

என்று எழுவதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

முன்