நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் தேசியச் சிந்தனையாளர்;
காந்தியக் கொள்கையாளர்; ஓவியப் புலமையாளர்; தமிழ் உணர்வாளர்; நாட்டுப்பற்றாளர்;
சமூகச் சிந்தனையாளர் தீண்டாமையை எதிர்த்தவர்; கள்ளுண்ணுதலைக் கடிந்தவர்; தமிழன் என்ற தனித்தன்மையை கவிதைகள் வழி ஊட்டியவர்; அண்ணல் காந்தியடிகளின்
அகிம்சைக் கொள்கை நாடு தோறும் பரவிடக் கவிதைகள் இயற்றியவர்; பெண்ணின்
பெருமை பேசியவர்; வறுமை நீங்கக் கவிதை வடித்தவர் . |