பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனின்
கவிதைகளால் பெரிதும்
ஈர்க்கப்பட்டவர்; பொதுவுடைமையை விரும்பியவர்; ஏழைகளின்
வாழ்க்கையைக் கவிதையாக்கியவர்; இளமையிலிருந்தே சுயமரியாதையோடு
வாழ்ந்தவர்; மக்களின் நிலை உயர எழுதியதாலும்,
அவர்கள் படும்பாட்டையும் பண்பாட்டையும் அவர்கள்
புரிந்து கொள்ளும் முறையில்
எழுதியதாலும்
‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்பட்டவர். பொது
மக்கள் புரிந்து கொள்ளும்
படியாக எளிய பாடல்களைப் பாடித் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர். |