6.4 பட்டுக்கோட்டையாரும் திரைப்படமும் | |
சமூகச் சுரண்டல் எதிர்க்கப்பட வேண்டும் எனத் திரைப்படத்தின் மூலம் எடுத்துச் சொன்னவர் பட்டுக்கோட்டையார்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாடல் எளிமை,
மக்கள் பிரச்சினைகளைக் கூறுதல் ஆகியவற்றால் ‘மக்கள் கவிஞர்’ என அனைவராலும்
பட்டுக்கோட்டையார் அழைக்கப்பட்டார் எனக் கண்டோம். மக்கள் மத்தியில் செல்வாக்குப்
பெற்றிருந்த துறையாகிய திரைப்படத்திலும் பல பாடல்களைப் பாடினார். |
|
6.4.1 திரைப்படப் பாடல்கள் | |
மக்களின் வாழ்வில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருக்கும்
துறை திரைப்படத்துறையாகும். இந்த ஊடகத்தின் மூலம் சொல்லப்படும் கருத்துகள்
யாவும் மக்கள் தங்களின் வாழ்க்கைக்குரியதாக எடுத்துக் கொள்ளக்கூடியனவாக இருக்கின்றன.
திரைப்படத்தில் காதலிப்பதைப் போலக் காதலிப்பதும் அதில் சொல்லப்படும் செய்திகளைத்
தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவரும்
சூழலில் வர்க்கச் சிந்தனை பொதுவுடைமைச் சிந்தனை ஆகியவற்றைத் திரைப்படத்தில்
சொல்லமுடியும் என்பதை நடைமுறைப் படுத்தியவர் பட்டுக்கோட்டையார். இத்தகைய பாடல்களைப்
பின்னர்க் காண்போம். உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து
திரைப்படத்தில் அந்தந்தக் கதைச் சூழ்நிலைகளில் அவர்
பாடிய பாடல்கள் பல சூழல்களுக்கும் பொதுவானவை. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன் ஆகிய பாடல்கள் திரைப்படத்துறையில் பெரிய வரவேற்பைப் பெற்றன.
திரைப்படத்தில் காதல் பாடல்கள் மிக எளிமையாக, அதே
நேரம், உணர்வுகள் மடைதிறந்த வெள்ளம்போல் அமைந்து வெளிப்படுகின்றன. பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?
- இல்லே |