மிகப் பழைய தமிழ்
இலக்கியமாகிய சங்க இலக்கியங்கள் கவிதை வடிவில் இருப்பதை
நீங்கள் அறிவீர்கள். கற்பனையும் சொற்கட்டமைப்பும் இணையும்
போது அழகிய கவிதை உருவாகிறது. யாப்பிலக்கணம் கவிதை அமைப்பை
விளக்குகிறது. காலப்போக்கில் கவிதையின் கட்டமைப்பும் சொல்லாட்சியும்
சிறிது சிறிதாக மாறத் தொடங்கின. மேலை நாட்டினரின் தொடர்பினால்
கவிதையிலும் மாற்றங்கள் இடம்பெற்றன. எனவே பழைய கவிதைகள் மரபுக்
கவிதை என்றும் புதிய கவிதைகள் புதுக்கவிதை என்றும் பெயர்
பெற்றன. இந்த விளக்கங்களை இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.
பாடுபொருள், உத்தி,
படிமம், குறியீடு முதலியவற்றை விளக்கி, புதுக்கவிதையின்
முழுவடிவத்தை நமக்கு விளக்குகிறது.
|