பாடம் - 2

p10312 பாரதியாரின் கவிதைகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் ஒரு கவிதையான “பெண்கள் விடுதலைக் கும்மி” பற்றி விரிவாகப் பேசுகிறது. பெண்கள் எப்படி ஆண் சமுதாயத்தினரால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை இந்தப் பாடம் விவரிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
பாரதியார் பெண்ணை எப்படிப் புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார் என அறியலாம்.
  •  
பெண்கள் வீட்டிற்குள்ளே எவ்வாறு அடக்கப்பட்டுள்ளனர் என உணர்ந்து கொள்ளலாம்.
  •  
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற பார்வையைப் புரிந்து கொள்ளலாம்.
  •  
கற்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என பாரதியார் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.
  •  
பெண்கள் அறிவு மேம்பட்டவர்கள், ஆக்கம் நிறைந்தவர்கள் என்பதைப் பெண்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.