தாத்தா ஆகும்போது கவிஞன் குழந்தை
ஆகிறான். அப்போது பேரக் குழந்தைகளும், அவர்களது பொம்மைகளும் அவனுக்கு விளையாட்டுத்
தோழர்கள் ஆகிவிடுகின்றனர். தமிழன்பனின் குறும்பாக்களில் குழந்தைகள், பொம்மைகள்
பற்றியவை மிகுதியாய் உள்ளன.
செடிகொடிகளின் பூக்கள் எல்லாம்
என்ன தெரியுமா? குழந்தை உதட்டில் இடம் கிடைக்காமல்போன ‘சிரிப் பூ’க்கள் தானாம்
(பக்கம் : 52)
குழந்தைக்குத் தன் பொம்மை மேல்
எவ்வளவு பாசம்! உறங்கும் போதும் அதைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
அதன் தாய்க்கே இதைக் கண்டு பொறாமை வருகிறதாம் ! (பக்கம் : 32)
குழந்தை கைக்குப் போவதற்கு, அதனுடன்
விளையாடுவதற்குப் பொம்மைகளுக்குள் போட்டி, பொறாமையாம் :
குழந்தைக்கு
ஒரு பொம்மை பிடிக்கும்
உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
கைக்குப் போகத் துடிக்கும் ! (பக்கம் : 42)
இவ்வளவு பாசம் காட்டும்
ஒரு குழந்தை இறந்து போய்விட்டால்...... உயிரற்ற பொம்மையின் உள்ளத்துக்குள்
கவிஞர் தம் உயிரைச் செலுத்தி எண்ணிப் பார்க்கிறார் :
மழலைக்கா
இறுதி யாத்திரை?
பழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்லை
கேட்கிறது தூக்க மாத்திரை (பக்கம் : 32)
(இறுதியாத்திரை = சாவு ஊர்வலம்)
தமிழன்பனின் லிமரைக்கூ - குறும்பாக்கள்
சிரிப்பையும் வரவழைக்கின்றன. சிந்தனையையும் எழ வைக்கின்றன. சிலவேளை நம்மை அழவைக்கின்றன.
|