6.4 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கண்ணப்ப நாயனார் புராணம் பற்றிய செய்திகளைப் படித்தீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதனை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள்.

புராணம் என்றால் என்ன என்பது பற்றியும், பெரிய புராணம் கூறும் செய்திகளைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
கண்ணப்ப நாயனார் பற்றிய செய்திகளைப் பற்றி, சிறப்பு நிலையில் விளக்கமாக அறிந்து இருப்பீர்கள்.
கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு முதலியவற்றால் பக்தி நெறியில் படைக்கும் காப்பியங்களுக்குப் பெரிய புராணம் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளதனை அறிந்திருப்பீர்கள்.
பெரிய புராணத்தின் நூலாசிரியர், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. திண்ணனாரின் பெற்றோர் யாவர்? [விடை]
2. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்? [விடை]
3. சிவ கோசரியாருக்கும், திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது? [விடை]
4. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்? [விடை]
5. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக. [விடை]
6. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன? [விடை]