தன் மதிப்பீடு : விடைகள் - I  | 
 |
| 6. | கைக்கிளையும் பாடாண் திணையும் குறித்து எழுதுக. | 
| 
  பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும். கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல், எல்லா நிலத்திற்கும் எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல, பாடாண் திணையும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும்.  | 
 |
| முன் | |