|  
  இதுவரை இப்பாடத்திலிருந்து நீங்கள் என்னென்ன தெரிந்து 
 கொண்டீர்கள் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.  
 
  
 - எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு பற்றித் தெரிந்து 
 கொண்டீர்கள்.
   
 - அன்றைய தமிழரின் சமூக வாழ்க்கை பற்றிய பல செய்திகளை
 அறிந்துகொண்டீர்கள். 
   
 - அரசியல், கல்வி, அறம், அறிவியல் போன்ற துறைகளில்
 சங்க கால மக்கள்தம் நிலை பற்றிப் புரிந்து கொண்டீர்கள்.
  
 - அவர்களின் அன்பு, நட்பு, வீரம், மானம், ஈகை முதலிய
 பண்புகளை உணர்ச்சி நலம் பொருந்திய பாடல்கள் மூலம்
 உணர்ந்து கொண்டீர்கள்.
   
 
 - உவமை, உருவகம், உணர்ச்சி, வெளிப்பாடு இவற்றில்
 புறநானூற்றுப் பாடல்கள் சிறந்து உயர்ந்த இலக்கியத்
 தரத்துடன் விளங்குவதைப் புரிந்து கொண்டீர்கள்.
    
  
  |