மக்களாட்சியில், ஆளப்படுகின்ற மக்கள் பேசும்
மொழியே
ஆட்சி மொழியாக அமைவது தான் இயற்கை ஆகும். அதுவே மக்களாட்சிக் கோட்பாட்டினுக்கு
ஏற்புடையது. வேற்றுமொழி பேசும் ஆட்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட
நாட்டில் ஆட்சி மொழியானது ஆளுவோரின்
நலனுக்கேற்ப மாற்றப்படுகின்றது. ஒரு நாட்டில் பரந்து பட்ட மக்களின்
மொழியானது புறக்கணிக்கப்பட்டு வீட்டுமொழியாக மாறுமெனில், அது நாளடைவில்
வழக்கொழிந்து விடும். எனவே ஆட்சிமொழியானது சமூக ரீதியில் முக்கிய இடம்பெறுகின்றது. தமிழகமானது கடந்த அறுநூறு ஆண்டுகளாகப் பிறமொழி பேசும்
ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருக்கின்றது. இந்நிலையிலும்
தமிழானது தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்திடப்
போராடி வருகின்றது. ஆட்சித்தமிழின் தனித்தன்மையும்
கலைச்சொல்லாக்கமும் மேம்பாடு அடைந்திட ஆட்சித்தமிழ்
மொழி பெயர்ப்புகள் உதவுகின்றன. இன்றைய சமூக,
அரசியல் சூழலில் ஆட்சித் தமிழின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளும்
வகையில் இந்தப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
|