நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார்
அருள்பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம்
திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய
சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம்
திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர்
மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண
உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
தமது நூல்களில் ஒன்றான திருச்சண்பை விருத்தத்துள்,
ஆறு தேறும் சடையான் அருள்மேவ
வீறு தேறும் தமிழால் வழிகண்டவன்
|
|
(திருச்சண்பை விருத்தம்)
|
எனவும் இவர் திருஞானசம்பந்தரைப் பெரிதும் போற்றி
மகிழ்கிறவர். இவ்வாறான 40 பனுவல்களின் தொகுப்பாக
இப்பதினொராம் திருமுறை அமைந்திருப்பதை இப்பாடம் விளக்கி
நிறைகிறது. பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின்
பெரியபுராணம் பற்றிய விரிவான செய்திகளைப் பின்வரும்
பாடத்தில் (A0112) அறிந்து கொள்ளலாம்.
|