|  
           
   
 பொய்கையாழ்வார்,               பூதத்தாழ்வார்,               பேயாழ்வார் 
        ஆகிய
 மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
 காலத்தால்        முந்தியவர்கள் என்பதால் "முதல் மூவர்" என்று
 அழைக்கப்பட்டனர்.  
 
  
 
  
 |   இவர்        காஞ்சிபுரத்தில் 
 (கச்சி) திருவெஃகாவில்
 ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில்
 தோன்றினார். இவர் அருளியன 100
 பாசுரங்கள்               கொண்ட        முதல் திருவந்தாதி ஆகும். (திருவெஃகா என்பது
 சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்
 ஆகும்.)  
  | 
  
 
  | 
  
  
  
 
  
 
  
 |   இவர்        திருக்கடல் 
        மல்லையில் (மாமல்லபுரம்)
 ஐப்பசி மாதத்தில்        அவிட்ட        நட்சத்திரத்தில்
 அவதரித்தவர். இவர் அருளிய 100
 பாசுரங்கள் கொண்ட நூல் இரண்டாம் திருவந்தாதி
 என்று அழைக்கப் படுகின்றது. 
  | 
  
 
  | 
  
  
  
 
  
 
  
 |   இவர் திருமயிலையில் 
 (மயிலாப்பூர்) ஐப்பசி
 மாதத்தில் சதய நட்சத்திரத்தில் தோன்றினார்.
 இவர் அருளிச் செய்தன 100 பாசுரங்கள்
 கொண்ட மூன்றாம் திருவந்தாதி ஆகும். 
  | 
  
 
  | 
  
  
 ஆழ்வார்களில், 
 காலத்தால் முன்னே 
 தோன்றிய பொய்கையார்,
 பூதத்தார், பேயார் 
        ஆகிய        மூன்று 
        ஆழ்வார்களும் முதல்
 ஆழ்வார்கள் 
        என்னும் பெருமைக்குரியவர்கள். 
        இவர்களின்
 பாசுரங்கள், பாமரர் 
 முதல் பாராண்ட 
 மன்னர் வரை பண்டைத்
 தமிழகம்               முழுவதும் 
               பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின;        கோயில்கள் 
        பெருகின;        பக்தி, 
        இயக்கமாக மாறத் 
 தொடங்கி எங்கும் பரவ வித்திட்டன. 
  
  |