3.2 பா வடிவங்கள் | ||||||||||||||||||||||
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப் பா வடிவங்கள் ஐந்து வகைப்படும். |
||||||||||||||||||||||
3.2.1 வெண்பா | ||||||||||||||||||||||
வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம். |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
· மாச்சீர், விளச்சீர்,
காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்;
கனிச்சீர் வரக்கூடாது.
|
||||||||||||||||||||||
வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு: |
||||||||||||||||||||||
1. குறள் வெண்பா |
||||||||||||||||||||||
இரண்டடிகளில் அமைவது. உள்ளத் தனைய துயர்வு |
||||||||||||||||||||||
2. சிந்தியல் வெண்பா | ||||||||||||||||||||||
மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். 1) நேரிசைச் சிந்தியல் வெண்பா (எ.கா) கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை 2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா (எ.கா)
மாமழை
போற்றுதும் மாமழை போற்றுதும் 3) நேரிசை வெண்பா நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு. (எ.கா)
நீக்கம் அறுமிருவர்
நீங்கிப் புணர்ந்தாலும் 4) இன்னிசை வெண்பா நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும். (எ.கா)
கல்லா
ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்; 5) பஃறொடை வெண்பா 5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
(எ.கா)
நன்றி யறிதல்,
பொறையுடைமை, இன்சொல்லோ(டு) 6) கலிவெண்பா 13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும். இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும். இவை வெண்பா பற்றியனவாகும். |
||||||||||||||||||||||
3.2.2 ஆசிரியப்பா |
||||||||||||||||||||||
ஆசிரியப்பாவின் இலக்கணத்தையும், வகைகளையும் இனிக் காண்போம். |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
· மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்; கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:
எல்லா அடிகளும் நான்கு சீர்களை உடையனவாகவும்,
ஈற்றயலடி மூன்று சீர்களை உடையதாகவும் அமைவது.
தானே முத்தி தருகுவன் சிவனவன்
எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக அமைவது. வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
|
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
முதலடியும் ஈற்றடியும் அளவடியாக அமைய இடையில்
அளவடி, சிந்தடி, குறளடி ஆகியன விரவி வருமாறு அமைவது. நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை எங்கு மாற்றி
அமைப்பினும் பொருளும் ஓசையும் மாறாதிருப்பது. மாறாக் காதலர் மலைமறந் தனரே
|
||||||||||||||||||||||
3.2.3 கலிப்பா | ||||||||||||||||||||||
கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும்
காண்போம். ·
காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி,
கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.
· தரவு: கலிப்பாவின் முதல் உறுப்பு; எருத்து எனவும் கூறப்பெறும். கலிப்பா நால்வகைப்படும். அவை: தரவு, மூன்றடுக்கிய தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன கொண்டது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். தாழிசையை அடுத்து அம்போதரங்கம் அமைவது அம்போதரங்கக் கலிப்பாவாகும். தாழிசையை அடுத்தும் அம்போதரங்கத்திற்கு முன்புமாக அராகம் அமைவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்பெறும். |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
(எ.கா) (தரவு)
வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
(தாழிசை)
சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
(தனிச்சொல்)
அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் - இப்பாடல் ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். பிறவகைக் கலிப்பாக்களை இலக்கியங்களைப் பயின்று சுவைக்கலாம். |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
தரவு மட்டுமே பெறும்; அளவடிகளால் அமையும்; சிற்றெல்லை
நான்கடிகள்; பேரெல்லைக்கு எல்லையில்லை; ஈற்றடி சிந்தடியாக
வரும். கலித்தளை பயின்று வரும். வெண்சீர் வெண்டளையும்
இடையிடையே வரும்.
முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ் |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது. உறுப்புகளுக்கேற்பத் தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பெயர்பெறும் பல வகைகளையுடையது. தரவு கொச்சகக் கலிப்பா குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும்
நான்கடியாலும், சிறுபான்மை ஐந்தடி (அ) எட்டடியாலும் இது
அமையும்.
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
மா விளம் விளம் விளம் என்னும் வாய்பாட்டில் ஒவ்வோர்
அரையடியும் அமையும்; நான்கடிகளையுடையது; நேரசையில்
தொடங்குவது பதினோரெழுத்தும், நிரையசையில் தொடங்குவது
பன்னீரெழுத்தும் பெறும்; அரையடிகள் கொண்டு விளங்கும்;
ஏகாரத்தின் முடியும்.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!
- இதில் விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் வந்தமைந்தது; எழுத்து எண்ணிக்கை மாறவில்லை. |
||||||||||||||||||||||
3.2.4 வஞ்சிப்பா | ||||||||||||||||||||||
வஞ்சிப்பாவின்
இலக்கணத்தையும் வகைகளையும் காண்போம். · கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை
நாலசைச் சீர்களும் வருவதுண்டு. வஞ்சிப்பா இருவகைப்படும். அவையாவன:
குறளடிகளால் ஆனது.
வளவயலிடைக் களவயின்மகிழ்
|
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
சிந்தடிகளால் அமைவது.
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
|
||||||||||||||||||||||
3.2.5 மருட்பா | ||||||||||||||||||||||
மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும்
கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக
அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட
ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’
எனப்படும். · புறநிலை வாழ்த்து
‘வழிபடு தெய்வம் நின்னைக் காப்பதாக; நீ நீடு வாழ்க’
என்பது.
அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்
ஒருமருங்கு பற்றிய காமம்.
பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
· வாயுறை வாழ்த்து
‘இன்று வெறுப்பளிப்பினும் பின்னர் நன்மைதரும்’ என்று
உண்மைப் பொருளை வற்புறுத்தி வாழ்த்துவது.
வம்மின் நமரங்காள் மன்னுடையான் வார்கழல்கண்
வாழ்த்துமின் தில்லை நினைமின் மணிமன்றம்
இவ்வாறு பா வகைகள் அமைகின்றன. |
||||||||||||||||||||||
|