5.4 உத்திகள் | |
கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும். மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன. புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர். இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம். |
|
தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காக உவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும். நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து. ஓர் உலோபி என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது. மரபுக்கவிதை
உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர் என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது. புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப். தொழிற்சாலைப்
பாத்திகளில் என்பதில்,
என உருவகம் அமைகின்றது.
புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது. படிமம்
உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.
காலக் கிழவி எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது. |
|
மரபுக்கவிதை
சொல்லாலோ, பொருளாலோ,
சொற்பொருளாலோ
முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை
வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக
அணியிலக்கணம் கூறும். 'கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு
பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது;
அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால்
மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’
என்கிறார் சிவப்பிரகாசர்.
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது.
படித்திருந்தாலாவது
|
|
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும்,
திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட்
சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும்,
அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு
சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக்
குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில்
புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம்
சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது
சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
|
|
மரபுக்கவிதை
ஒருவகைச் சொற்றொடர்,
பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை
பாடுவதில் சிறந்து
விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :
ஆடிக் குடத்தடையும்
; ஆடும்போ தேஇரையும் ; இப்பாடலில்,
(1) குடத்தடைதல் - பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம் என்பனவாகப் பொருள் அமையும். புதுக்கவிதை சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன.
என்னை
|
|
மரபுக்கவிதை சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம்
என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், 'மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா. புதுக்கவிதை
புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது
இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக்
காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும்
அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை
உணர்த்தவல்லது குறியீடு.
அஞ்சு விரலும் |
|
மரபுக்கவிதை
இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும். நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும்
பாடல்
பின்வருமாறு:
கடல்முரசம் ஆர்ப்பக்
கதிர்க்கயிற்றால் ஏறி
கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச்
சுட்டுகின்றார் மு.மேத்தா.
ஏ, கடிகாரமே
|
|
மரபுக்கவிதை புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ
எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது
தொன்மம் ஆகும்.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர்
புதுக்கவிதை தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை,தாயங்களில் - சகுனி
எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன். |
|
உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகார வழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம். சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு : அரனவ னிடத்திலே ஐங்கரன்
வந்துதான் இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன. புதுக்கவிதை
அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார். ‘தாங்கள் தவறாது |
|
மரபுக்கவிதை
இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது. மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர். புதுக்கவிதை
பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட் போன்றது இது எனலாம். நிஜம் நிஜத்தை நிஜமாக என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.
இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம். |