தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(1) |
பாத்திரப் படைப்பின் இன்றியமையாமையைக் குறிப்பிடுக. |
நாவலின் பாத்திரப் படைப்புதான் ஒரு கதையை உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு அடிப்படையாகும். நாவல் பாத்திரங்களின் வாயிலாகத்தான் கதையைக் கூறுகிறது. பாத்திரங்கள் இல்லையேல் கதை இல்லை. கதைப் பின்னல் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நாவலில் உயிரோட்டமாக இருப்பது பாத்திரப் படைப்பே ஆகும். |