பாடம் - 2

P20332 தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தொடக்க காலச் சிறுகதைப் போக்கை, வ.வே.சு.ஐயர், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் ஆகியோரின் சிறுகதைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது. மேலும், எழுபதுகளிலுள்ள சிறுகதைப் போக்கை ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகள் வாயிலாக எடுத்துரைக்கிறது.

பின்பகுதியில் இன்றைய சிறுகதையின் போக்கு, போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • தமிழில் தொடக்க காலச் சிறுகதைகள் சமூக இன்னல்களை எடுத்துக் கூறியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

  • எழுபதுகளில் தோன்றிய சிறுகதைகள் சமூகத்தின் அடித்தளத்தில் முடங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தியதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • இன்றைய சிறுகதைகள் எவ்வாறு சமூகத்துடன் பேசுவதற்கான ஓர் ஊடகமாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு