பாடம் - 3

P20333 சிறுகதையின் கருப்பொருள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


சிறுகதை என்னும் படைப்பிலக்கிய வகையைப் பற்றிச் சொல்கிறது. மக்களின் கதைகேட்கும் ஆர்வமே இந்தத் துறை வளர்வதற்குக் காரணம் என்பதையும், அதன் பொருண்மை (கதைப்பொருள்) பற்றியும் கூறுகிறது. கதையின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • சிறுகதை என்னும் படைப்பிலக்கியக் கருப்பொருள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • சிறுகதைத் துறையில் சிறந்து விளங்கியவர்களைப் பற்றி அறியலாம்.

  • சில சிறுகதையாசிரியர்களின் படைப்புகளின் சிறப்பை அறிந்து மகிழலாம்.

  • மொழி, நோக்கம், விளைவிக்கும் பயன் முதலியவற்றில் அவை எவ்வாறு சிறந்து விளங்குகின்றன என்பதைக் காணலாம்.

பாட அமைப்பு