3.2
தற்காலத் தமிழ் நாடக முன்னோடிகள் |
|
தமிழ்
- நாடகம் புத்தொளி பெற பல முன்னோடி நாடக ஆசிரியர்கள் கடுமையாக
உழைத்தார்கள். நலிந்து வந்த மூன்றாம் தமிழான நாடகத் தமிழை உயர்த்திப்
பிடித்தனர். |
|
இருபதாம்
நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின்
புத்துயிராக விளங்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர்
தலைசிறந்த நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும்
விளங்கினார். தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார்.
1918இல் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா
எனச் சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார்.
சங்கரதாஸ் சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் மற்ற நாடக
ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத்
தம் நாடகங்களுள் புகுத்தினார். நாடகங்களை முறையாக
ஒழுங்குபடுத்தி மேடையேற்றியது இவருடைய சிறப்பாகும்.
வள்ளி திருமணம், பவளக் கொடி, சத்தியவான் சாவித்திரி,
நல்லதங்காள் நாடகம், அபிமன்யு சுந்தரி போன்ற இவரது
நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில்
நடந்து கொண்டுதான் உள்ளன. |
|
சுவாமிகளினால்
ஏற்பட்ட நாடகப் போக்குகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
சங்கரதாஸ்
சுவாமிகள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
தமிழ்
நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல்
சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்தை மேனாட்டு
நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர். தமிழ் நாடக நடிகர்களுக்குச்
சமுதாயத்தில் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகம்
பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான
ஒரு நிலையை அறவே மாற்றினார். 1897இல் இவரால்
ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபையே தமிழ்நாட்டில்
நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடக சபையாகும். பம்மல்
சம்பந்த முதலியார் 94 நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய
மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம்,
உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. நாடகத் தமிழ்,
நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன
இவர் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். இந்திய
நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார். |
|
பம்மல்
சம்பந்த முதலியாரின் நாடகப் போக்குகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
பம்மல்
சம்பந்த முதலியார் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
பாவலர்
1920இல் பால மனோகர நாடக சபா என்னும்
நாடகக் குழுவைத் தொடங்கினார். தனபதி, விஜய
விலோசனை, பதி பக்தி, கதர் பக்தி, பம்பாய் மெயில்
போன்ற நாடகங்களைஎழுதி மேடையேற்றியுள்ளார்.
பத்திரிகையாளராகவும், புனைகதையாசிரியராகவும் விளங்கியவர்
பாவலர். அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் செல்வாக்குடன்
விளங்கியதைக் கண்டு அதற்கேற்ப நாடகங்களை அமைத்தார்.
பாவலரின் நாடகப் போக்குகளாக, |
|
|
|
|
|
|
|
|
|
|
|
தெ.பொ.கிருஷ்ணசாமிப்
பாவலர் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
தமிழ்
நாடக உலகில் பல புதுமைகளைச் செய்த
பெருமையுடையவர் சி.கன்னையா. ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா
என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி இரங்கூன், யாழ்ப்பாணம்
ஆகிய கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று நாடகங்களை
நடத்தினார். இவருடைய நாடகக் குழுவில் 200 பேர்
இருந்துள்ளனர். 10 வண்டி லாரி பெறுமானமுள்ள காட்சி
அமைப்புக்களுக்கான பொருட்கள் வைத்திருந்தார். 1915ஆம்
ஆண்டிலேயே கும்பகோணத்தில் காலை 10மணிக் காட்சியாக
நாடகம் நடத்திய பெருமை கன்னையா அவர்களுக்கு உண்டு.
சி.கன்னையாவின் தமிழ் நாடகப் போக்குகளாக, |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சி.கன்னையா |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
நவாப்
இராஜ மாணிக்கம் மதுரை தேவி பால விநோத
சங்கீத சபை என்னும் நாடகக் குழுவை 1933இல்
தொடங்கினார். இவருடைய ஐயப்பன் நாடகம்தான் தமிழகத்தில்
ஐயப்ப பக்தி வளர ஒரு காரணமாக இருந்தது. |
|
|
|
நவாப் இராஜ மாணிக்கம் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
எம்.கந்தசாமி
முதலியார் நடிகராகத் தொடங்கி, பின்
சிறந்த நாடக ஆசிரியராகவிளங்கினார். இவர்
ஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்து புதினங்கள் உட்பட, பல
புதினங்களை நாடகங்களாக்கினார். தமிழில் புதினங்களை
நாடகமாக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவரே. |
|
|
|
எம்.கந்தசாமி முதலியார்
|
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
நாடக
அரசி எனப்படும் கும்பகோணம் பாலாமணி
அம்மாள், முதன் முதலாகப் பெண்களையே முழுக்க முழுக்க
வைத்து பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி என்ற
குழுவைத் தொடங்கினார். 70 பெண்கள் இதில் இருந்தனர்.
திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய நாடகப் பணி
பாதிக்குமென்று இவர் கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாதிருந்தார். சமுதாய சீர்திருத்த நாடகங்களை முதன்
முதலில் நடத்தியவரும் இவரே. பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர்
நாடகத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. |
|
|
|
பாலாமணி அம்மாள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
மதுரகவி
பாஸ்கரதாஸ் கவிஞர், இசை அமைப்பாளர்,
நாடகப் பாவலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவர்
தலைமையில் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில்
1920இல் ஆரம்பிக்கப்பட்டது. தேச பக்தியையும், ஆங்கில
அரசிற்கெதிரான கருத்துகளையும் தைரியமாக எடுத்துரைத்த
போக்கே இவரின் சிறப்பாகும். |
|
விஸ்வநாததாஸ்,
தேசியம் கலந்த நாடகப் பணியில் தம்மை
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தான் நடித்து வந்த
வள்ளி திருமணம், பவளக்கொடி, நல்லதங்காள் முதலான
புராண நாடகங்களிலும் இந்திய நாட்டு விடுதலையை
முழக்கும் பாடல்களைப் புகுத்திப் புரட்சிசெய்தவர்
விஸ்வநாததாஸ். |
|
ஒளவை
தி.க.சண்முகம் 1925இல் மதுரை ஸ்ரீ பால
சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக்
குழுவைத் தொடங்கினார். பின் 1950இல் டி.கே.எஸ். நாடகக்
குழு தொடங்கப்பட்டது. அவருடைய நாடகங்கள் ஏதாவதொரு
நீதியைப் புகட்டியது. வட்டப்புள்ளி விளக்கு, குறைப்பான்
விளக்கு முதலியன இவர் நாடகத்திலேயே முதன்முதலில்
பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகள் இலண்டனிலிருந்து
வரவழைக்கப்பட்டன. ஒளவையார் நாடகம் மூலம் ஒப்பனைத்
திறத்திலும் புகழ் பெற்று விளங்கினார். மனிதன் நாடகத்திற்கு
திரைப்படம் போலவே எழுத்துகளைக் காண்பித்தனர். |
|
|
|
டி.கே.எஸ் சகோதரர்கள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை
அழுத்துக |
|
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் சிறு வயது முதலே
பல நாடகக் குழுக்களில் நடித்தார். 1944இல் என்.எஸ்.கே
நாடகக் குழுவைத் தொடங்கினார். பகுத்தறிவுச் சிந்தனைகளைச்
சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுடன் நல்லதம்பி, கிந்தனார் போன்ற நாடகங்கள் உருவாக்கப்பட்டன. |
|
‘தன்மானக்’
கொள்கைகளுடன் திராவிட இயக்கத்தினர்
நாடகங்கள் எழுதினர். அறிஞர் அண்ணா 1934இல்
சந்திரோதயம் என்ற நாடகத்தைப் படைத்தார். தொடர்ந்து
நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி
எனப் பல நாடகங்களை எழுதினார். வாழ்க்கையின் பல்வேறு
கோணங்களையும் நாடகம் மூலம் அலசியது இவருடைய தனித்த
போக்காகும். தூக்குமேடை நாடகம் மூலம் அறிமுகமான
கருணாநிதி, நச்சுக் கோப்பை, மந்திரி குமாரி,
வெள்ளிக்கிழமை, மணிமகுடம், போர் வாள் எனப் பல
நாடகங்களைப் படைத்துள்ளார். அடுக்கு மொழியிலும், அனல்
தெறிக்கப் பேசுவதிலும் இவருடைய நாடகப் பாத்திரங்கள்
தனித்த போக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். |
|
எஸ்.வி.சகஸ்ரநாமம்
1952இல் சேவா ஸ்டேஜ் நாடகக்
குழுவை ஆரம்பித்தார். அதன் மூலம் மேடையேறிய நாடகம் தாகூரின்
கதையைத் தழுவிய கண்கள் என்பதாகும். இந்த நாடகம் தமிழ்
நாடகமேடைக்கு ஒரு திருப்பு முனையாக,
கதை - காட்சி - நடிப்பு யாவற்றிலுமே மாறுதலை ஏற்படுத்தியது.
பல மேனாட்டுக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக
நடிக்கப்பட்டன. வானவில் என்னும் நாடகம் சுழலும் மேடை
அமைத்து நடிக்கப்பட்டது. சிறந்த கதாசிரியர்களான
பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் போன்றோர் கதைகளும்
நாடகங்களாக்கப்பட்டன. நாடகப் பட்டறை நடத்திப் பலருக்கு
நாடகப் பயிற்சியும் தந்துள்ளார் எஸ்.வி.சகஸ்ரநாமம். |
1. |
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவின் பெயர் என்ன? |
விடை |
2. | சங்கரதாஸ் சுவாமிகளின் சிறப்பு யாது | விடை |
3. |
தமிழின் முதல் கவிதை நாடகம் எது? |
விடை |
4. |
இந்திய நாடகமேடை என்ற நாடக இதழை வெளியிட்டவர் யார்? |
விடை |
5. |
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய இரு நாடகங்களைக் குறிப்பிடுக. |
விடை |
6. |
முதன் முதலில் பெண்களையே வைத்து ஆரம்பிக்கப்பட்ட நாடகக் குழு எது? |
விடை |