|
4.4
தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை இதழியலின் சிறப்பையும்
நோக்கத்தையும் கண்டோம். இப்பாடத்தின் மூலம்
அறிந்து
கொண்டவற்றை நினைவு படுத்திப் பாருங்கள்.
-
இதழ்களின் சிறப்பைத் தெரிந்து கொண்டோம்.
-
இதழ்கள் மக்களாட்சியின் காவல்
தேவதையாக அமைந்து
செய்திகளைப் பரப்பியும் விளக்கியும் விமரிசித்தும் கருத்தை
உருவாக்குவதை உணர்ந்து கொண்டோம்.
-
அரசியலமைப்பில் இதழ்கள் சமுதாய
விழிப்புணர்வை உருவாக்கியும். கல்விச் சேவை புரிந்தும், எதிர்க்கட்சியாகச்
செயலாற்றியும், வளர்ச்சிப் பணிகளில் பங்கு கொண்டு சிறப்பாக இலங்குவதையும்
அறிந்து கொண்டோம்.
-
தெரிவித்தல், நெறிப்படுத்தல்,
பொழுதுபோக்கு, வியாபாரம், சேவை முதலிய பொதுவான நோக்கங்களின் அடிப்படையில்
இதழ்கள் செயற்படுகின்றன என்பதைக் கண்டோம்.
-
ஒவ்வோர் இதழும் அவற்றின் உள்ளடக்க
அடிப்படையில் சிறப்பு நோக்கம் உடையவையாக உள்ளன. அவற்றுள் இன்றியமையாத
இதழ்கள் சிலவற்றை அறிந்தோம்.
இதழியல் பற்றிய இப்பாடத்தின் மூலம்
இதழ்களின் சிறப்பையும் நோக்கத்தையும் அறிந்து கொண்டோம்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
இதழ்களின்
பொதுவான நோக்கங்கள் யாவை? |
|
2.
|
தினமணி
நாளிதழின் இணைப்புகளைக் குறிப்பிடுக. |
|
3.
|
தமிழ்
மாகசீன் -
குறிப்பு வரைக. |
|
4.
|
கீழ்க்கண்ட
இதழ்களின் சிறப்பு நோக்கம் யாது?
(i) |
ஞானபாநு
|
(ii) |
விமோசனம் |
(iii)
|
கலாவல்லி
|
|
|
|