1.0 பாட முன்னுரை

உலகினைப் பத்திரிகைகள் இன்று ஆட்சி செய்கின்றன; பத்திரிகை பற்றிய அறிவும், உணர்வும், தெளிவும் எல்லாருக்கும் இருக்க வேண்டும். விரைந்து, வியக்கும் வண்ணம் வளர்ந்து வரும் இதழியல் பற்றி ஆய்வதும், மாணவர்களுக்கும் மக்களுக்கும் போதிப்பதும், இன்றியமையாத் தேவை ஆகின்றன.

உலகில் உள்ள அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இதழியல் துறை வளர்ந்து வருகின்றது. அறிவியல், மின்னணுத் தொழில் நுட்பம் போன்றவற்றின் முன்னேற்றம் காரணமாக இதழ்கள், செய்தித்தாள்கள் அளவிலும், இயல்பிலும், பரப்பிலும் வகையிலும் பெருகியுள்ளன; அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன.