|
3.1 இடைச்சொல் பொருள்கள் இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது என்பதை தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, |
|
3.1.1 ஏகார இடைச்சொல்
ஏகார
இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, |
|
1)
|
பிரிநிலை
|
இவனே வெற்றி பெற்றான் - இதில் ஏ
என்பது பலருள் ஒருவனைப் பிரித்துச் சுட்டுகிறது. ஆகவே பிரிநிலை. |
|
2)
|
வினா
|
நீயே சொன்னாய்? இதில் நீயே என்பது
நீயோ என்னும் வினாப் பொருள் உணர்த்துகிறது. |
|
3)
|
எண்
|
அறமே பொருளே இன்பமே வீடே
எனப்
பொருள் நான்கு - இதில் அறமும் பொருளும் இன்பமும் வீடும் என எண்ணிச் சொல்வதால் ஏ எண்ணுப் பொருள் உணர்த்துகிறது. |
|
4)
|
தேற்றம்
|
செய்யவே செய்தான். இதில் ஏ தேற்றப்
(உறுதிப்) படுத்துகின்றமையால் தேற்றம் (நிச்சயம்) |
|
5)
|
இசை நிறை
|
ஏயே இவெளாருத்தி பேடி! இதில் வரும்
ஏ, ஏ என்பன வேறு பொருள் இல்லாமல் இசையை மட்டும் நிறைத்து நிற்கின்றன. |
|
6)
|
ஈற்றசை
|
‘எழுத்து அது முதல் சார்பென விரு
வகைத்தே’ (நன்னூல், நூற்பா-58) - இதில் ஏ ஈற்று அசையாக நிற்கிறது. அதாவது வேறுபொருள் இல்லாமல் வெறும் அசையாக நிற்கிறது. |
|
3.1.2 ஓகார இடைச்சொல்
‘ஓ’
என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எடுத்துக்காட்டு |
|
1)
|
ஒழியிசை
|
படிக்கவோ வந்தாய் - இது படிப்பதற்கு
வரவில்லை, விளையாட வந்தாய் என்ற ஒழிந்த (மறைந்திருக்கிற) பொருளைத் தந்தது. ஆகவே ஒழியிசை. |
|
2)
|
வினா
|
நீயோ கண்ணன்? இதில் ஓ வினாப்
பொருளில் வந்தது. |
|
3)
|
சிறப்பு
|
ஓ ஓ கொடியது - இதில் ஓ இழிவு
சிறப்புப் பற்றி வந்தது. (மிக இழிவு) ஓ ஓ பெரியர் - இதில் ஓ உயர்வு சிறப்புப் பற்றி வந்தது. (மிக உயர்வு) |
|
4)
|
எதிர்மறை
|
அவனோ கேட்பான் - இதில் அவன்
கேட்க மாட்டான் என்று பொருள்படுதலால் ஓ எதிர்மறை. |
|
5)
|
தெரிநிலை
|
அலியை நோக்கி. இது ஆணோ?
அதுவுமன்று; பெண்ணோ? அதுவுமன்று. இக்கூற்றில் அலி என்பது தெரியநிற்றலால் ஓ தெரிநிலை |
|
6)
|
கழிவு
|
ஓ ஓ கெட்டேன் - இதில் கடந்த
நிகழ்ச்சிக்கு வருந்துவதால் ஓ கழிவுப் பொருளில் வந்தது |
|
7)
|
பிரிநிலை
|
இவனோ கொண்டான் - பலருள்
ஒருவனைப் பிரித்துக் காட்டுவதால் ஓ பிரிநிலை. |
|
8)
|
அசை நிலை
|
பார்மினோ! (பாருங்கள்) இதில் ஓ
வேறொரு பொருளுமின்றி அசையாகவே நிற்கிறது. |
|
3.1.3 என, என்று - இடைச்சொற்கள்
என, என்று ஆகிய இந்த இரண்டு இடைச்சொற்களும் வினை, எடுத்துக்காட்டு |
|
1)
|
வினை |
:
|
மகன் பிறந்தான் எனத் தந்தை
மகிழ்ந்தான். |
|
|
|
மகன் பிறந்தான் என்று தந்தை
மகிழ்ந்தான். வினையொடு இயைந்து வந்தது. |
|
|
2)
|
பெயர் |
:
|
அழுக்காறு என ஒருபாவி - அழுக்காறு
என்று ஒருபாவி - இங்கு அழுக்காறு என்னும் பெயரோடு (பெயர்ச்சொல்லோடு) இயைந்து வந்தன. |
|
3)
|
குறிப்பு |
:
|
‘பொள்ளென' ஆங்கே புறம்வேரார்
பொள்ளென்று ஆங்கே புறம்வேரார் - ‘பொள்' என்ற விரைவுக்குறிப்பு மொழியோடு இயைந்து வந்தன. |
|
4)
|
இசை |
:
|
ஒல்லென ஒலித்தது. ஒல்லென்று ஒலித்தது.
‘ஒல்’ என்ற இசைக்குறிப்புச் சொல்லோடு வந்தன. |
|
5)
|
எண் |
:
|
‘நிலமென நீரென தீயென வளியென
வானெனப் பூதங்கள் ஐந்து’. நிலமென்று நீரென்று தீயென்று வளியென்று வானென்று பூதங்கள் ஐந்து - எண்ணொடு இயைந்தன. |
|
6)
|
பண்பு |
:
|
வெள்ளென விடிந்தது. வெள்ளென்று
விடிந்தது - பண்பைக் குறிக்கும் சொல்லோடு இயைந்தன. |
|
3.1.4 உம்மை இடைச்சொல் உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், எடுத்துக்காட்டு |
|
1)
|
எதிர்மறை | : |
நாள் தவறினும் நாத்தவறான் - இதில்
நாள் தவறாது என்று பொருள் படுதலால் உம்மை எதிர்மறை. |
|
2)
|
சிறப்பு | : |
அறிஞருக்கும் எட்டாப்பொருள் - இதில்
பல நூல்களையும் கற்ற அறிஞருக்கும் என்று அறிஞரை உயர்த்துவதால் உயர்வு சிறப்பு |
|
|
நாயும் தின்னாச் சோறு. இதில்
கக்கியதைத் தின்னும் நாயும் என்று நாயை இழிவு படுத்துவதால் இழிவு சிறப்பு. |
||
|
3)
|
ஐயம் | : |
பத்தாயினும் எட்டாயினும் கிடைக்கும்.
இதில் ஒன்றைத் துணிந்து கூறாமையால் ஐயத்தை உணர்த்தியது. |
|
4)
|
எச்சம் | : |
இராமனும் வருந்தினான் - இதில்
இராமன் வருந்துமுன் இலக்குமணனும் வருந்தினான் என்று பொருள் கொண்டால் - இது இறந்தது தழீஇய எச்சவும்மை. |
|
|
: |
இராமன் வருந்திய பின் இலக்குமணனும்
வருந்தினான் என்று பொருள் படின் - இது எதிரது தழீஇய எச்சவும்மை. |
|
|
5)
|
முற்று | : |
எல்லாரும் வந்தார் - இது முற்றுப்
பொருளைத் தருதலால் இது முற்றும்மை. |
|
6)
|
எண் | : |
நிலமும் நீரும் தீயும்
வளியும்
வெளியுமெனப் பூதம் ஐந்து - இதில் பொருள்களை எண்ணுதலால் எண்ணும்மை. |
|
7)
|
தெரிநிலை | : |
அலியை நோக்கி, ‘ஆணும் அன்று
பெண்ணும் அன்று’, என்று சொன்னால் அலி என்பது தெரிய நிற்றலால் - தெரிநிலை. |
|
8)
|
ஆக்கம் | : |
தஞ்சாவூர் நகரும் ஆயிற்று - இதில்
ஊராயிருந்த தஞ்சாவூர் இப்போது நகரம் ஆயிற்று என்று ஆக்கப்பொருள் தருதலால் - ஆக்கம். (வளர்ச்சி) |
|
|
மேலே நாம் கண்ட முற்றும்மை சில
இடங்களில் எச்சப்பொருளைத் தருவதும் உண்டு. எல்லாரும் வந்திலர் - இதில் சிலர் வந்தனர் என்ற எஞ்சிய பொருள் - எச்சப் பொருள் அமைந்துள்ளது. |
|
3.1.5 சில எண்ணிடைச் சொற்கள் நாம் இதுவரை அறிந்துள்ள எண் இடைச்சொற்கள் ஏ, ஓ, எடுத்துக்காட்டு:
(ஈ) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொல்லோடு வந்தாலும்
|