4.8 இரக்கும் சொற்கள்


ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து
பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும்.

என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த
நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும்
சொல்லாகும்.

(எ-டு) அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக.

தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப்
பயன்படுத்தும் சொல்லாகும்.

(எ-டு) நண்பா உன் புத்தகத்தைத் தா.

கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும்
தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும்
சொல்லாகும்.

(எ-டு) மகனே, எனக்குத் தண்ணீர் கொடு.

இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.


ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை
            (நன்னூல் - 407)