இது அகவற்பா என்றும் வழங்கப்படும்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
சீர் |
இயற்சீர்கள் மிகுதியாக வரும். பிற சீர்களும் கலந்து வரும். ஆனால் கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள்
வாரா. |
தளை |
நேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத்
மிகுந்து வரும். பிறதளைகளும் கலக்கலாம். |
அடி |
அ) |
பொதுவாக ஆசிரியப்பா அளவடியால்
அமைவது, ஆயினும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடி சிந்தடியாக வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவின்
இடையிடையே குறளடிகளும் சிந்தடிகளும் வரும். |
ஆ) |
ஆசிரியப்பா குறைந்த அளவு
மூன்றடிகளைப் பெறும். அதிக அளவு புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. எத்தனை
அடிகளும் வரலாம். வரம்பு
இல்லை. |
ஈறு |
ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ’ காரத்தில் முடிவது சிறப்பானது. நிலை மண்டில ஆசிரியப்பா ‘என்’ எனமுடிவது சிறப்பானது. |
ஓசை |
ஆசிரியப்பாவின் ஓசை அகவல்
ஓசையாகும். |
ஆசிரியப்பாவின் வகைகள்
நேரிசை ஆசிரியப்பா |
இணைக்குறள் ஆசிரியப்பா |
நிலை மண்டில ஆசிரியப்பா |
அடிமறி மண்டில ஆசிரியப்பா |
என ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.
(1) |
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று,
ஈற்றயலடி சிந்தடியாய,் ஏனைய அடிகள் அளவடிகளாய் வரும். |
(2) |
ஏகாரத்தில் முடிவடையும். |
(எ.டு)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே(குறுந்தொகை
:3) |
 |
(நீர் = கடல், ஆர் அளவு = மிகுந்த
ஆழம், கருங்கோல் = கரிய காம்பு,
தேன் = தேன்கூடு,
இழைக்கும் = கட்டும், நட்பு = காதல்) |
இந்தப் பாடலில் ஈற்றயலடி சிந்தடியாக, ஏனைய அடிகள்
அளவடிகளாக இருப்பதையும் நட்பே என ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவதையும் காண்கிறீர்கள்.
ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
3.2.2 இணைக்குறள் ஆசிரியப்பா |
(1) |
ஆசிரியப்பாவிற்குரிய பொது இலக்கணங்களைப்
பெற்று வரும். |
(2) |
முதலடியும் கடைசி அடியும் அளவடிகளாகவே வரும்.
இடையே அளவடிகளோடு குறளடிகளும் சிந்தடிகளும் கலந்து வரும். |
(எ.டு)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே |
 |
(கேண்மை = காதல், தீர்பு ஒல்லாது = தீராது) இப்பாடலில் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாய் வர, இடையடிகள் குறளடிகளாகவும் சிந்தடிகளாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள். ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவடைந்துள்ளது. ஆகவே இது இணைக்குறள் ஆசிரியப்பா
ஆகும்.
3.2.3 நிலை மண்டில ஆசிரியப்பா |
(1) |
இது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று
எல்லா அடிகளும் அளவடிகளாக வருவது. |
(2) |
இப்பாவுக்கு ‘என்’ எனும் ஈறு சிறப்பானது. |
(எ.டு)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே(குறுந் -
18) |
(வேரல் = மூங்கில், வேர்க்கோட் பலவு = வேரில் காய்த்த பலாமரம்,
செவ்வியை = பக்குவமுடையவன்,
அறந்திசினோர் = அறிந்தோர்; கோடு = கொம்பு,
தூங்கியாங்கு = தொங்குவதுபோல, தவ =
மிகுதியாக)
 |
இந்தப் பாடல் எல்லா அடிகளும்
அளவடிகளாக
அமைந்திருப்பதைக்
காணுங்கள். ஆசிரியப்பாவுக்குப்
பொதுவான ஈறு ஆகிய ஏகார ஈறு
பெற்றுள்ளது.
ஆகவே இது
நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும். |
பெரிய படத்தைக் காண |
|
3.2.4 அடிமறி மண்டில ஆசிரியப்பா |
(1) |
இது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று,
எல்லா அடிகளும் அளவடிகளாக வரும். |
(2) |
எந்த அடியையும் முதல், நடு, இறுதியாக மாற்றி வைத்துப்
பார்த்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் இருக்கும். |
(எ.டு)
சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே;
வாரலை யெனினே யானஞ் சுவலே;
சார னாட நீவர லாறே; |
(சூரல் = பிரம்புக்கொடி, பம்பிய = நிறைந்த, கான்
ஆறு = காட்டாறு, சூர்அரமகளிர் = அச்சம் தரும் வனதேவதைகள்,
ஆர் அணங்கினர் = மிகுந்த துன்பம் தருவோர், வாரலை = வராவிட்டால்,
அஞ்சுவல் = அஞ்சுவேன், வரல் ஆறு = வரும் வழி)
 |
இப்பாடலின் ஒவ்வோர் அடியும்
தனித்தனியே பொருள் முடிந்து
அமைந்துள்ளது. ஆகவே எந்த
அடியையும் முன்பின்னாக மாற்றி
அமைத்தாலும் பொருள் மாறாது. எல்லா |
அடிகளும் அளவடிகளாக இருப்பதால் ஓசையும் கெடாது. ஆகவே இது அடிமறிமண்டில ஆசிரியப்பா
ஆகும்.
|