கலிப்பாவின் பொது இலக்கணம்:
(1) |
சீர் |
மாச்சீரும், விளங்கனிச் சீரும் கலிப்பாவில்
வாரா. ஏனைய சீர்கள் வரும். |
(2) |
தளை |
கலித்தளை மிகுந்து வரும். பிறதளைகளும்
கலந்துவரும். |
(3) |
அடி |
அ) |
அளவடிகளால் அமையும். |
ஆ) |
குறைந்த அளவு நான்கடி. அதிக
அளவு புலவன் உள்ளக்கருத்தைப்
பொறுத்தது. வரம்பு இல்லை. |
(4) |
உறுப்பு |
கலிப்பா ஆறு உறுப்புகளை உடையது.
தரவு,
தாழிசை என்பன முதல் உறுப்புகள்.
அராகம், அம்போதரங்கம், தனிச்சொல்,
சுரிதகம் ஆகியன துணை உறுப்புகள். |
(5) |
ஈறு |
கலிப்பா, இறுதியில் ஆசிரியச் சுரிதகமோ
வெண்பாச் சுரிதகமோ கொண்டு முடியும்.
அதாவது கலியடிகளின் இறுதியில் ஆசிரிய
அடிகளோ வெண்பா அடிகளோ வந்து
கலிப்பா முடியும். |
(6) |
ஓசை |
கலிப்பாவுக்குரிய ஓசை துள்ளல்
ஓசையாகும். |
கலிப்பாவின் வகைகள்
அடிப்படையில், கலிப்பா, |
1. ஒத்தாழிசைக் கலிப்பா |
2. வெண் கலிப்பா |
3. கொச்சகக் கலிப்பா |
என மூவகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் சில உட்பிரிவுகள்
உண்டு. இவற்றின் விரிவைப் பின்னர் வரும் பாடங்களில்
காணலாம்.
3.3.1 ஒத்தாழிசைக் கலிப்பா |
(1) |
கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும். |
(2) |
முறையே தரவு உறுப்பு ஒன்றும், தாழிசை உறுப்பு
மூன்றும், தனிச்சொல் ஒன்றும், சுரிதக உறுப்பு
ஒன்றும் வரும். இவ்வாறு வருவது நேரிசை
ஒத்தாழிசைக் கலி எனப்படும். |
(1) |
கலித்தளை அமைந்து கலியோசை தழுவியும்,
வெண்தளை அமைந்து வெள்ளோசை தழுவியும்
வரும். |
(2) |
ஈற்றடி சிந்தடியாய் முடிவது வெண்கலிப்பா
எனப்படும்.
|
(3) |
இதில் ஆசிரியத்தளையும் கலந்து வரலாம். |
(எ.டு)
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார் வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து |
(ஏர் - அழகிய, கோதை = மாலை, எருத்து
= கழுத்து,
வார்மலர் = நீண்ட, மலர்போன்ற (கண்), தார் = மாலை, வரை
= மலை, மலி = மிகுந்த)
இப்பாடலில் கலித்தளைகளுடன்
வெண்டளையும்
ஆசிரியத்தளையும் கலந்து வந்துள்ளன. ஈற்றடி சிந்தடியாக
வெண்பாப்போல அமைந்துள்ளது. ஆகவே இது வெண்கலிப்பா
ஆகும்.
கொச்சகம் = கொய்சகம், அதாவது புடவையின்
கொசுவம்.
கொசுவ மடிப்புப் போல உறுப்புகள் பல அடுத்தடுத்து வருவதால்
இது கொச்சகக் கலிப்பா எனப்படுகிறது.
(1) |
ஒரு தரவு மட்டும் தனியே
வரலாம். தரவுடன்
தனிச்சொல், சுரிதகம் சேர்ந்தும் வரலாம். |
(2) |
இரண்டு தரவு வந்து தனிச்சொல் சுரிதகம்
சேர்ந்தும்
வரலாம். |
(3) |
தாழிசை சில வரலாம். |
(4) |
தாழிசை பல வரலாம். |
(5) |
தரவு, தாழிசை,
அராகம், அம்போதரங்கம்,
தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளும்
தம்முள் மயங்கியும்,
வெண்பாவினோடும்
ஆசிரியத்தோடும் மயங்கியும் வரலாம். இவ்வாறு
வருபவை எல்லாம் கொச்சகக் கலிப்பா ஆகும். |
 |
இவற்றுள், ஒரு தரவு தனித்து வரும்
தரவு கொச்சகக்
கலிப்பாவுக்கு மட்டும் இங்கு எடுத்துக் காட்டுக் காணலாம்.(எ.டு) |
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த
சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே |
(கதம் = சினம், செயிர்த்து = சினந்து, ஆழி
= சக்கரப்படை,
முருக்கி = அழித்து, எல்லைநீர் = இருண்ட தன்மையுடைய,
வியன் = அகன்ற, கொண்மூ = மேகம், மல்லல் =
செழித்த,
மருமம் = மார்பு)
மேற்காட்டிய பாடலில் நான்கடித்தரவு
ஒன்று தனியே
வந்துள்ளது. கலித்தளை மிகுந்து துள்ளல் ஒசை அமைந்துள்ளது.
ஆகவே இது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும். |