வஞ்சிப்பா,
வஞ்சித்தாழிசை |
வஞ்சித்துறை |
வஞ்சிவிருத்தம் |
என மூன்று இனங்களைக் கொண்டது.
(1) |
குறளடி நான்காய் வரும். |
(2) |
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும். |
குறளடி நான்காய் வரும். (எ.கா)
மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய் |
இது இருசீர் அடி நான்காய் வந்த வஞ்சித்துறை.
இது சிந்தடி நான்காக வரும்.
சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமாயின்
நீல வுண்க ணிவள்வாழுமே |
இது சிந்தடி நான்காய் வந்த வஞ்சிவிருத்தம். வஞ்சிப்பா
பெரும்பாலும் குறளடிகளால் அமைவது.
சிறுபான்மை சிந்தடிகளால் அமையும் வஞ்சிப்பாவும் உண்டு.
மேற்காட்டப் பெற்ற இனங்கள் குறளடியாலும் சிந்தடியாலும்
அமைந்திருப்பதன் காரணமாக இவை வஞ்சிப்பாவின் இனங்களாக
வகுக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். |