ஹரிஹரனும் புக்கனும் விசயநகரப் பேரரசைக் கி.பி.
1336-ல்
நிறுவினர். புக்கனின் மகன் கம்பணன். அவன் மனைவி
கங்கமாதேவி, தன் கணவனது தென்னகப் படையெடுப்பை, ‘மதுரா
விஜயம்’ எனும் தனது நூலில் விரிவாகக் கூறியுள்ளாள்.
(விசயநகரப் பேரரசு பற்றிப் பாடம் 5-இல் படிக்கலாம்.)
கி.பி. 1371-இல் கம்பணன் மதுரை நகரைக்
கைப்பற்றிய பிறகு
அவனது பிரதிநிதிகளான லக்கண உடையார் போன்றவர்கள்
கி.பி. 1448 வரை மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்தனர்.
இக்காலகட்டத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், சோழநாடு
ஆகிய பகுதிகளில் குறுநில ஆட்சியாளர்களாகப் பாண்டியர்கள்
திகழ்ந்தனர்.
|