தமிழகத்தில் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட கலையின்
இக்காலக் கட்டத்தில் நாடகக் குழுக்கள் நடிகர்களுக்கான சங்கரதாசு சுவாமிகள் மிகச் சிறந்த நாடக ஆசிரியராகவும் நடிகராகவும், பயிற்றுவிப்பாளராகவும் விளங்கினார். எமதருமன், இரணியன், கடோற்கசன் முதலிய வேடங்களுக்கு அவர் பயிற்சியளிப்பார். நாடகப் பயிற்சிக்கேற்ற நாடகங்களையும் சுவாமிகள் ஆக்கியளித்தார்.
காரணம் எனலாம். குழுக்களில் நடிப்புப் பயிற்சியோடு இசைப் பயிற்சி மற்றும் இலக்கியப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நடிகர்கள் தங்கள் புலமையை விருத்தி செய்ய இதன் வழி வகைசெய்யப்பட்டது. தங்களது நடிப்புப் பயிற்சியினைச் சிறப்பாக மேற்கொள்ள இப்பயிற்சி பயன்பட்டது. இலக்கியங்கள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றை நாடகமாக்கி வழங்கும் நிலை அப்போது இருந்து வந்தது. கந்தசாமி முதலியார் இவ்வகை நாடகமாக்குதலில் மிகவும் சிறந்து விளங்கினார். நடிகர்களுக்கு மேடை அச்சம் (Stage Fear) ஏற்படாதிருக்க வேண்டி, சிறிய வேடங்களுக்கான நடிப்புப் பயிற்சி முதலில் அளிக்கப்பட்டது. பின்பு முக்கியமான வேடங்களுக்கான பயிற்சியளிக்கப் பெற்றது. படிப்படியாக அரசவையில் தடி பிடிப்பவன், தோழன், மந்திரி, மன்னன் எனப் பாத்திரங்கள் ஏறு முகமாக மாற்றம் செய்யப் பெறும் நிலை மேற்கொள்ளப் பெற்றது. இவ்வகை மாற்றம் செய்வதன் மூலம் மேடைக் கூச்சம் இல்லாமல் செய்யப்பட்டது. இவ்வாறு நடிப்புப் பயிற்சி மேற்கொள்ளப் பெறும் நிலையில் குரல் பயிற்சியும் கூடவே மேற்கொள்ளப் பெற்றது. ‘நல்ல நடிகனுக்கு வளமான நல்ல குரல் தேவை’ என்பது உணரப்பட்டிருந்தது. இதற்காகத் தனிப் பயிச்சி மேற்கொள்ளப் பெற்றது. குரல் பயிற்சிக்காக அதிகாலையில் எழுந்து பாடி, சாதகம் செய்வார்கள். ஆண் வேடம் ஏற்பவர்கள் கம்பீரமான குரலுடனும், பெண் வேடம் ஏற்பவர்கள் இனிமையான குரலுடனும் பேசச் செய்யும் பயிற்சி மேற்கொள்ளப் பெற்றது. குரல் பயிற்சியினைத் தொடர்ந்து உரையாடல்களை உச்சரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப் பெற்றது. ஆங்கில உரையாடல்களைக் கூடத் தேர்ந்த முறையில் பேசச் செய்யும் பயிற்சி மேற்கொள்ளப் பெற்றது. குரலின் ஏற்ற இறக்கங்கள், வன்மை மென்மை இவை குறிப்பாகப் பேணப்பட்டன.
தொழில் முறை நாடகக் குழுக்களும், பயின் முறை நாடகக்
பிற்காலத்தில் திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குப் இக்கால கட்டத்தில் உருவாக்கம் பெற்ற சிறந்த நாடகக் கலைஞர்களாகப் பலரைக் குறிப்பிடலாம். அவர்களில் முக்கியமானவர்களாக தி.க. சண்முகம், தி.க. பகவதி, என்.எஸ். கிருட்டிணன், எம்.கே.இராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம், டி.என். சிவதாணு, எஸ்.எஸ். இராசேந்திரன், எம்.ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், நவாப் ராஜ மாணிக்கம், பி.எஸ். கோவிந்தன், எம்.எஸ். திரௌபதி, டி.வி. நாராயணசாமி, ஏ.பி. நாகராசன் போன்றோரைக் கொள்ளலாம். மேலும் பல சிறந்த நடிகர்கள் தொழில் முறை நாடகக் குழுக்களில் உருவானவர்கள். நாடகக் கலைஞர்கள் பெற்ற நற்பெயரும், அவர்கள் மேற்கொண்ட மேடைத்தவமும், மேடை ஒழுக்கமும் தமிழ் நாடகக் கலைக்குப் பெருமை சேர்த்தது. அப்பெருமையால் நாடகக் கலைஞர்களும் சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறத் தொடங்கினர். சமுதாயத்தின் உயர்நிலையில் அவர்கள் போற்றப்பட்டனர். இப்பெருமைக்கும் பெருமை சேர்ப்பதாய் அவர்கள் படைத்தளித்த நாடகக் கதைகளும் சிறப்பு மிக்கதாக அமைந்திருந்தன. |