தமிழில்
தோன்றிய முதல் அம்மானை (கதைப்பாடல்)
இராமப்பய்யன் அம்மானையாகும். இதன் காலம் கி.பி.1640.
மதுரையில் கி.பி.1623 முதல் 1656 வரை ஆட்சி புரிந்த
திருமலை நாயக்கரிடம் தளவாயாக இருந்த இராமப்பய்யன்,
இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதி சடைக்கத்
தேவன் மீது போர் தொடுத்து அவனைச் சிறைசெய்து
வந்த கதையைக் கூறுவது இராமப்பய்யன் அம்மானையாகும்.
·
மன்னர்களின் மரபு
கதையின்
உள்ளே செல்வதற்கு முன்பு போரில் ஈடுபட்ட இரு
மன்னர்களின் மரபு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
விசுவநாத
நாயக்கர் (1529-1564) தொடங்கி வைத்த நாயக்க
வம்சத்தில் வந்தவர் திருமலைநாயக்கர் (1623-1659). இவரது
தளபதியே இராமப்பய்யன். இவனே கதையின் தலைவன்.
இராமநாதபுர
சேதுபதிகள் வம்சத்தில் வந்த இரண்டாம்
சடைக்கன் சேதுபதியே இராமப்பய்யனை எதிர்த்துப்
போரிட்டவன். இனி அம்மானை கூறும் கதையைப் பார்க்கலாம்.
· இயல்பு
சேதுபதியின்
மக்களான குமாரன், அழகன் ஆகிய இருவரும்
களத்தில் காலனுக்கு இரையாகிவிட்டதைக் கேட்டதும்
அவர்களுடைய அன்னை இரங்கி அழுவதைக் கதைப் பாடல்
இயல்பாக விளக்கிப் படிப்போரைக் கசிந்து உருகச் செய்கிறது.
·
அமைப்பு
கதை
நிகழ்ச்சியின் அடிப்படையில் இராமப்பய்யன்
அம்மானையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இராமப்பய்யன் தலைமையிலான நாயக்கப் படையெடுப்பில்
தொடங்கிச் சேதுபதி தன் படையுடன் இராமேசுவரம் சேர்ந்தது
வரை
ஒரு
பகுதியில்
அடங்கும். இரண்டாவது பகுதி
இராயருக்கு உதவி செய்ய இராமப்பய்யன் வெங்களூர் சென்ற
பயணத்தைக் குறிக்கும். மூன்றாவது பகுதியில்
இராமேசுவரத்திற்குப் பாலம் கட்டுதல், நாயக்கர் படைக்கும்
மறவர் சேனைக்கும் நடந்த தரைப்போர், பரங்கியர் கலந்து
கொண்ட கடற்போர், வன்னியன் வெற்றிக்கும் சாவுக்கும்
பிறகு சடைக்கன் அடைக்கலம், சிறைவாசம், சடைக்கன்
விடுதலை, சேது நாட்டின் அரசைச் சேதுபதி மீண்டும் பெறல் ஆகியவையாகும்.
வரலாற்றையும்
வாழ்வையும் இணைத்து இனிது விளக்குவது
கதைப்பாடல் என்ற உண்மை இக்கதைப்பாடல் மூலம் நன்கு
புலப்படுகிறது.
2.2.1
கதைச் சுருக்கம்
பாண்டியர்
ஆட்சிக்குப் பிறகு மதுரையைத் திருமலை நாயக்கர்
தலைசிறந்த மன்னனராக ஆட்சி புரிந்து வந்தார். திருமலை
நாயக்கர் காலத்தில் (கி.பி.1623-1659) மறவர் நாட்டைத்
தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கன் தேவன் ஆண்டு
வந்தான். அவனுடைய நாட்டைப் பலமுறை முயன்றும்
திருமலை நாயக்கரால் கைக்கொண்டு ஆணை செலுத்த
முடியவில்லை. இக்காலத்தில் இராமப்பய்யன், திருமலை
நாயக்கரின் தளபதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்.
 |
திருமலை நாயக்கர்
|
திருமலை
நாயக்கரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரிய
இராமப்பய்யன் பல போர்க்களங்களைக் கண்டவன்.
திருமலையின்
எண்ணத்தை உணர்ந்த இராமப்பய்யன்,
சேதுபதியைத் தானே அடக்க, திருமலையின் அனுமதியைப்
பெறுகின்றான். திருமலையின் அனுமதியோடு இராமநாதபுர
சேதுபதி இரண்டாம் சடைக்கத்தேவன் மீது போர்தொடுக்கச்
செல்கிறான் இராமப்பய்யன்.
செல்லும் வழியில்
மானாமதுரையில் தங்கியிருந்த பொழுது, சடைக்கத் தேவன்
தன் மருமகன் வன்னியனை அனுப்பி இவன் மீது போர்
தொடுத்து வெற்றி பெறுகிறான்.
எழுபத்திரண்டு
பாளையக்காரர்கள் இராமப்பய்யனுக்கு உதவி செய்தும்
போரில் அவன் வெற்றி பெறவில்லை. போகலூர்க்
கோட்டையிலே நடந்த போரிலும் வன்னியனே வெற்றி
பெறுகிறான். இராமப்பய்யன் அரியாசபுரத்தை முற்றுகையிட்டுத்
தாக்கும்போது சடைக்கத்தேவன் காயம் அடைந்து
இராமேசுவரம் சென்றுவிடுகிறான். இந்நிலையில் இராமப்பய்யன்,
இராயருக்கு உதவி புரிவதற்காக வடக்கே அனுப்பப் பெற்று
வெற்றி வாகை சூடுகிறான். மீண்டும் போகலூர்க் கோட்டையை
முற்றுகையிட்டுச் சேதுபதியின் மக்களான குமாரன், மதியார்
அழகன் ஆகியோரைப் பிடித்துச் சித்திரவதை செய்து
கொல்கிறான். இராமேசுவரத்திலுள்ள சேதுபதியுடன் போரிட
பரங்கியர் உதவியுடன் கப்பல் போரும் நடைபெறுகின்றது.
வெற்றியும் தோல்வியும் இரு பக்கமும் மாறிமாறி ஏற்பட்டுக்
ªகாண்டிருக்கின்ற நிலையில் வன்னியன்
வைசூரி
அம்மையினால் துன்பப்படுகிறான். பாம்பன் துறைப்போரில்
வன்னியன் இறக்க, அவன் மனைவி ஈமத்தீயில் விழுந்து உயிர்
துறக்கிறாள். பின்னர் சடைக்கத்தேவன் சரணடைய, சிறையில்
அடைக்கப்படுகிறான். சிறையிருந்த காலத்தில் மாயன் (திருமால்)
அருளால் அவன் கால் விலங்குகள் தெறித்தன. காவலர்
மூலமாக இச்செய்தி அறிந்த திருமலை, சடைக்கத் தேவனை
விடுவித்து, ஆடை ஆபரணம் கொடுத்து ‘ராமநாத சுவாமி
நல்ல பெருந்தீவில் சென்றிருங்காண்’ என்று விடை கொடுத்து
அனுப்பியதாகவும். விடைபெற்ற சேதுபதி சொக்கலிங்கம்
மீனாட்சி துணையென்று வணங்கி. |