1. அயல்நாட்டுப்     பாதிரியார்கள் பழமொழிகளைச்
    சேகரித்து வெளியிட்டதின் நோக்கம் என்ன?

    மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப்
பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய
வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச்
சேகரித்து வெளியிட்டனர்.