1.3 தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள்கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமானஇலக்கியங்கள் தோன்றி, மொழியை வளப்படுத்தியுள்ளன.இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில்மிகுதியாகத் தோன்றியுள்ளன. நீண்ட வரலாற்றில் அரசாட்சி, பிறமொழிகளின் தாக்கம், சமூக மாற்றம், பண்பாடு, நாகரிகம்முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும்இலக்கியமும் மாறியது. எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப்புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம்ஆனது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும்புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன. எனவே தமிழில்இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம். தமிழில்உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கேதரப்படுகிறது.
1.3.1 தொல்காப்பியம்
தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவதுதொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண்டில்எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்தநூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம்,என்ற மூன்று அதிகாரங்கள்உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும்ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழில்உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியதுதொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள்இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில்அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ளஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம்திகழ்கிறது.
தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர்பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர்என்று அறியமுடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில்எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந்தரு திருவின்பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில்தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக்கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும்முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக்கூடவிட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர்,சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர்ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
1.3.2 நன்னூல்
பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால்இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்துஇலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டுஇலக்கணங்களையும் கூறுகிறது. நன்னூல் கி.பி. பதின்மூன்றாம்நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச்சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம்என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள்உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக்கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை,மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறைஆகியவை இடம் பெற்றிருக்கும். எழுத்து அதிகாரத்தில் ஐந்துஇயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள்உள்ளன.
‘அருங்கலை விநோதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றசீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல்இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிப்பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள்மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்புபரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர்.எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர்,சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலியபலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையேவிரும்பிப் படித்துவருகின்றனர்.
தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள்உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களின் விவரம் கீழேதரப்பட்டுள்ளது.
நூல் |
ஆசிரியர் |
காலம் |
இலக்கண வகை |
தொல்காப்பியம் |
தொல்காப்பியர் |
கி.மு4ஆம்நூற். |
எழுத்து,சொல்,பொருள் |
நன்னூல் |
பவணந்திமுனிவர் |
13ஆம்நூற். |
எழுத்து,சொல் |
நேமிநாதம் |
குணவீரபண்டிதர் |
12ஆம்நூற். |
எழுத்து,சொல் |
இறையனார்களவியல் |
--- |
7ஆம்நூற். |
அகப்பொருள் |
நம்பியகப்பொருள் |
நாற்கவிராசநம்பி |
13ஆம்நூற். |
அகப்பொருள் |
மாறனகப்பொருள் |
குருகைப்பெருமாள்கவிராயர் |
16ஆம்நூற். |
அகப்பொருள் |
புறப்பொருள்வெண்பாமாலை |
ஐயனாரிதனார் |
9ஆம்நூற். |
புறப்பொருள் |
யாப்பருங்கலம் |
அமிதசாகரர் |
10ஆம்நூற். |
யாப்பு |
யாப்பருங்கலக்காரிகை |
அமிதசாகரர் |
10ஆம்நூற். |
யாப்பு |
தண்டியலங்காரம் |
தண்டி |
12ஆம்நூற், |
அணி |
மாறன்அலங்காரம் |
குருகைப்பெருமாள்கவிராயர் |
16ஆம்நூற். |
அணி |
வீரசோழியம் |
புத்தமித்திரர் |
11ஆம்நூற், |
ஐந்திலக்கணம் |
இலக்கணவிளக்கம் |
வைத்தியநாததேசிகர் |
17ஆம்நூற். |
ஐந்திலக்கணம் |
தொன்னூல்விளக்கம் |
வீரமாமுனிவர் |
18ஆம்நூற். |
ஐந்திலக்கணம் |
சுவாமிநாதம் |
சுவாமிகவிராயர் |
18ஆம்நூற். |
ஐந்திலக்கணம் |
அறுவகைஇலக்கணம் |
தண்டபாணிசுவாமிகள் |
19ஆம்நூற். |
ஐந்திலக்கணம் |
முத்துவீரியம் |
முத்துவீரஉபாத்தியாயர் |
19ஆம்நூற். |
ஐந்திலக்கணம் |
பன்னிரு பாட்டியல் |
--- |
10ஆம்நூற். |
பாட்டியல் |
வெண்பாப்பாட்டியல் |
குணவீரபண்டிதர் |
12ஆம்நூற். |
பாட்டியல் |
இலக்கணவிளக்கப்பாட்டியல் |
தியாகராசதேசிகர் |
17ஆம்நூற். |
பாட்டியல் |
|
பயில்முறைப் பயிற்சி - I |
மேலே இருபது இலக்கண நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை கால வரிசைப்படி கொடுக்கப்படவில்லை. பொருள் வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளன.அந்த நூல்களைக் காலவரிசைப்படி எழுதிப்பாருங்கள்.
|
|
|