2.
வள்ளுவர் துறவு பற்றிக் கூறும் கருத்துகளுக்கும், பிறர்
கூறும்
கருத்துகளுக்கும் உள்ள வேறுபாடுகள் எவை?
இல்வாழ்க்கையை விட்டு, விலகி, காட்டுக்குள் சென்று, தனிமையாக
இருந்து, நோன்பு கொள்ளுதல் துறவு என்பார்கள் சமயவாதிகள்.
பதவியின்
மீது எந்தவிதப் பற்றும் இல்லாமல், அதைத்தானாக
விரும்பி
விட்டு விடுவதையும் துறவு என்பார்கள், நாத்திகர்கள்.
ஆனால்,
இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே, பொருள்கள்
மீதுள்ள
பற்றை விடுவதுவும், ஏற்கனவே ஒரு பொருளின் மீது
பற்று இருந்தாலும், அதனையும் துறக்கும் மனப்பக்குவம்
பெறுவதுவும், ஐந்து புலன்களை
அடக்குவதுவும், பற்று அற்றான்
ஆகிய இறைவன் மீது பற்று கொள்வதுவும் தான், துறவு என்கிறார்
வள்ளுவர்.
|