1.2 பண்
இசையைப் பண் என்ற
பெயரால் குறிப்பிடுவர். பண்
என்ற சொல்லும் காரணப்
பெயர்ச்சொல்லாகும். பண்ணுதல் என்ற தொழிலடியாகத்
தோன்றிய பெயர்ச்சொல்லாகும்.
பெருந்தானங்களைப்
பேச்சுறுப்புகள் என்பர். இதனைப்
பேச்சுத்தாளங்கள் என்றும் கூறுவர்.
தொல்காப்பியர்
பிறப்பியலில் இவ்வுறுப்புகள் எட்டு என்பர். இவற்றை இரண்டு
வகையாகப் பிரிப்பர். 1. காற்றறை, 2. செயற்கருவி.
1) காற்றறை
காற்றறை என்பது, காற்றுத்தங்கி
வெளிப்படும்
2) செயற்கருவி
செயற்கருவி ஐந்தாகும். பல், இதழ்,
நா, மூக்கு,
அண்ணம் என்ற ஐந்து உறுப்புகளையும் செயற்கருவியாகக்
கருதுவர். காற்றறையில் தங்கிய காற்றினால்
இச்செயற்
கருவிகள் தொழிற்படுதல் காரணமாக வெவ்வேறு வகையான
ஒலிகள் பிறக்கும் என்பதனைத்
தொல்காப்பியர்
குறிப்பிட்டுள்ளார்.இசை நூலார் இதனைப் பெருந்தானங்கள்
எட்டு எனக் குறிப்பிடுவர்.
பெருந்தானத்தால்
தோற்றி வைக்கப்படும் ஒலி இசை
ஒலிகள் ஆவதற்கு எட்டு விதமான வினைகள் செயல்பாடுகள்
தேவைப்படுகின்றன. இவற்றைக் கிரியைகள் என்பர்.
இவை எடுத்தல், படுத்தல்,
நலிதல் முதலிய எட்டு
ஆகும்.
எழுப்பிய குரலை உயர்த்தி
ஒலித்தல் எடுத்தலாகும்.
எழுப்பிய குரலைத் தாழ்த்தி ஒலித்தல்
படுத்தலாகும்.
எழுப்பிய குரலைப் படிப்படியாகக் தாழ்ந்து
ஒலித்தல்
நலிதலாகும்.
இவ்வாறு பெருந்தானம் எட்டானும்,
எட்டுவகைக்
கிரியைகளாலும் பண்ணிப் படுத்தமையால் பண்
எனப்
பெயர்
பண்களைப்
பெரும்பண்,பண்ணியல்,திறம், திறத்திறம்
என நான்கு வகையாகப் பகுப்பர்.
சுர அலகுகளின்
அமைப்பில் ஏறு நிரலிலும் (ஆரோகணம்) இறங்கு நிரலிலும்
(அவரோகணம்) ஏழு சுரங்கள் பெறுவதனைப்
பண்
என்றும், சம்பூர்ண இராகம் என்றும், மேள கர்த்தா ராகம்
என்றும் கூறுவர்.
ஆம்பல்
என்பது ஒருவகைப் பண்ணாகும்.இப்பண்ணைப்
பற்றிய செய்திகள் நற்றிணை
(123 : 10), ஐங்குறுநூறு
(215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு
(221-222)ஆகிய பாடல்களில்
காணப் பெறுகின்றன. கோவலர்கள் ஆம்பல்
பண்ணை
இசைக்கின்றனர். தட்டை,
தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக்
காலத்தில் இசைத்து
மகிழ்கின்றனர்.
காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டு்ள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.
மலையுறை தெய்வங்களை
மகிழ்விக்க, கூத்தரும்
விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம்
குறிப்பிடுகிறது.
நைவளம்
எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146),
சிறுபாணாற்றுப்படை
(36-38), பரிபாடல்
(18-20-21) வரிகளில்
குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய
பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும்,
இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி,
செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற
பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள்
தரும்
உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை
எனும்
நூலில்
ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார். (ப.79) அவை வருமாறு.
பக்தி இலக்கியங்களான தேவாரப் பாடல்கள் பண் சுமந்த பாக்களாக உள்ளன.தெய்வம் சுட்டிய வாரப் பாடல் தேவாரம் என்றழைக்கப்படுகிறது. இதனைத் தேவபாணி எனவும் கூறுவர். இறைவனைத் தேவாரத்தேவர் என்றும், தேவாரப் பாடல் பாடுவதனைத் திருப்பதியம் விண்ணப்பித்தல் என்றும், தேவாரம் பாடுபவரை பிடாரர், ஓதுவார் என்றும் கூறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய பாடல்களைப் பொதுவாகத் தேவாரம் என்றழைப்பர்.இவைகள் பண் சுமந்த பாடல்கள் ஆகும்.
திருஞானசம்பந்தர்
பாடிய பாடல்களைத் திருமுறையாக
வகுத்தவர்கள் பண் அடிப்படையில்
முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு :
திருஞானசம்பந்தர்
பாடிய பாடல்கள் பண் அடிப்படையில் பகுக்கப்பட்டிருப்பதனை இப்பட்டியல்
சுட்டுகிறது. இக்காலத்திலும்
இப்பண்ணமைவோடே பாடப் பெறுகின்றன. பண்களைப்
பற்றித் தேவாரப் பாடல்களில் பல செய்திகள் காணப்படுகின்றன.
சம்பந்தர் இறைவனைப் பண்ணிலாவும் மறை
பாடலினால்
(2.3.1) என்று குறிப்பிடுகிறார். தமது பாடல்களைப்‘பண்ணோடு
இசைப்பாடிய பத்தும்’ என்று குறிப்பிடுகிறார்.பண்ணுடைய பாடல்
நன்று என்றும், அத்தகைய பாடல் தவழும் ஊர் நல்ல ஊர்
என்றும், இத்தகைய இசை வல்லவர்களைப் பண்ணார் என்றும்,
பண்ணினைப் பாடி ஆடினால் இறையருளை
எளிதில் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான
திருவீழிமிழலைப் பதிகத்தில் பண்பற்றியும், பண்ணிசை
பற்றியும் பண்மூலம்
எழும் பல்வேறு ஓசை பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும்
சுவை பற்றியும்,அவைகளின்ஊடே அமையும் தாள ஒலி பற்றியும்
குறிப்பிடுகிறார்.
திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களை நான்கு, ஐந்து,ஆறு திருமுறைகளாக வகுத்துள்ளனர். நான்காம் திருமுறை பண் அடிப்படையிலும், ஐந்து, ஆறு திருமுறைகள் யாப்பு அடிப்படையிலும் பெயரிடப் பெற்றுள்ளன. நாவுக்கரசர் பாடியவைகளில் பத்துப் பண்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :
“தமிழோடு
இசைபாடல் மறந்தறி” யாத திருநாவுக்கரசர்
பாடிய பண்களில் பத்து நமக்குக் கிடைத்துள்ளன. இதில்
முதல் பண்ணாகக் கொல்லிப் பண் அமைந்துள்ளது.
‘கூற்றாயின வாறு விலக்கலீர்,’ எனும்
பதிகம்கொல்லிப்
பண்ணினால் அமைந்தது. கொல்லிப்பண்
பகைமையைக்
கொல்லும் பண் ஆகும். தேவாரத்தில் அதிகமான பதிகங்களில்
இப்பண் பயன்படுத்தப் பெறுகின்றது. இறைவன் இப்பண்ணை
விரும்பி ஏற்பான் என்பதை, ‘கொல்லியாம் பண்ணுகந்தார்
குறுக்கை வீரட்டனாரே’ என்று நாவுக்கரசர் போற்றுகிறார்.
சுந்தரர்
பாடிய பாடல்களைத் திருப்பாட்டு என்பர்.
இதனையும் தேவாரம் என்ற பெயரால் அழைப்பர்.
இவர்
பாடிய பாடல்கள் பண் சுமந்த பாடல்கள்
ஆகும். இவர்
பாடிய பதிகங்களில் 100 கிடைத்துள. இவை
பதினேழு
பண்களில் அமைந்துள.
சுந்தரர் பாடிய
பண்களில் செந்துருத்திப்
பண்
மிகவும் சிறப்பானதொரு பண்ணாகும்.
இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும்
பாடவில்லை. மீளா
அடிமை என்று தொடங்கும் பாடலில்
(பதி-95) இப்பண்
இடம் பெறுகிறது. இது ஒரு மங்கலகரமான
பண்ணாகும்.
அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது.
தேவாரப் பண்
இந்தியத் திருநாடு முழுவதும்,
போற்றப் பெற்றது. தஞ்சையில் இராசராசசோழன் தஞ்சைப்
பெரிய கோயிலில் தேவாரம் விண்ணப்பிக்கச் செய்தமையைக்
கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
|