2.0 பாட முன்னுரை தொன்மை
மிகு காலம் முதல்
இசைவளம்
நிரம்பியவர்களாகத் தமிழர்கள் விளங்கினர்.
அவர்கள்
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இசை முக்கியமானதோர்
இடத்தைப் பெற்றிருந்தது. பொழுதுபோக்கு நிலையில்
இது
தொடங்கினாலும் வாழ்வின் அங்கமாக வளர்ந்தது. சமுதாய
விழாக்களிலும், ஆலய வழிபாட்டிலும்,
தனிமனித
வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
தமிழர் வாழ்வோடு மிக நெருங்கிய
இசையாக மங்கல
இசை விளங்குகிறது. இதன் பெயர்க்காரணம், இவ்விசைக்
குழுவின் அமைப்பு, இவ்விசைக் குழுவில் முக்கியக் கருவியாக
விளங்கும் நாகசுரம், தவில் ஆகிய கருவிகளின் அமைப்பு,
ஆலய வழிபாட்டில் இவைகளின் பங்கு,
புகழ்பெற்ற
கலைஞர்கள் முதலியவை பற்றி இப்பாடம்
நமக்குப்
புகட்டுகிறது.
|