பாடம் - 4

d06134 இசைத் தமிழ் ஆய்வாளர்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

         இசைத் தமிழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலைகளைப் பற்றியும், இசைத் தமிழ் ஆய்விற்கு மூல இலக்கியமாகச் சிலப்பதிகாரமும், இந்நூலுக்கு எழுந்த உரைநூற்களான அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் பயன்பட்ட நிலை பற்றியும் இந்தப் பாடம் குறிப்பிடுகின்றது.

    சிலப்பதிகாரம் உரையுடன் வெளியிடப்பட்ட பின்பு, தஞ்சாவூர் மு.ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார், மதுரை பொன்னுச்சாமி பிள்ளை போன்றோர் இசைத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் மேற்கொண்ட இசைத் தமிழ் ஆய்வினை உணர வைக்கிறது.

    மேலும் குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி, வெள்ளை வாரணனார், பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம், பேராசிரியர் தனபாண்டியன் போன்றோர் இவ்வகை ஆய்வினை மேற்கொண்ட நிலைகளை எடுத்துரைக்கின்றது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சிலப்பதிகாரம் இசைத் தமிழ் ஆய்வுக் களஞ்சியமாக உள்ளதனை அறிந்து கொள்ளலாம்.
  • தஞ்சாவூர் மு.ஆபிரகாம் பண்டிதர் இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடியாக விளங்குகிறார் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
  • பண்டைய யாழ்க் கருவியின் அமைப்பு, சிறப்பு நிலைகளை உணர்ந்து கொள்ளலாம்.
  • பண்டை நாளில் தாய் இராகம் 32 தான் இருந்தது என்பதனைக் கண்டறியலாம்.
  • தமிழிசை ஆய்வு மேற்கொண்ட பலரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு