1.4 திருமாலுக்குரிய பதிகள், கோலம், பெயர்கள் | |||
பழந்தமிழ் நூல்களில் திருமாலுக்குரிய திருப்பதிகள்
பற்றியும், |
|||
1.4.1 திருப்பதிகள் | |||
திருமாலுக்குரிய பழமையான திருப்பதிகள் குறித்தும்
பழைய தமிழ் நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. காஞ்சி நகரைச் சார்ந்த திருவெஃகா, மதுரையை
அடுத்த |
|||
1.4.2 திருக்கோலம் |
|||
நற்றிணை (32:1) குறிப்பிடும். அவன் அணிந்த துளவ மாலை பற்றிப் பதிற்றுப்பத்தும் (31:8-9) பகர்கின்றது. சங்க நூல்கள் காட்டும் இத்திருக்கோலமே ஆழ்வார் பாசுரங்களில் விரிவும் பொலிவும் பெறுகின்றது. |
|||
1.4.3 திருப்பெயர்கள் |
|||
சங்க நூல்களில் திருமால் - மால், மாயோன், நெடியோன் என்னும் தமிழ்ப் பெயர்களாலேயே குறிக்கப்படுகிறான். இவற்றுள் மால் என்பதற்குப் ‘பெரியோன்’ என்றும் மாயோன் என்பதற்குக் ‘கரியவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். இதனை அரண் செய்வது போல, “பெரியவனை மாயவனை” என்று தொடங்கி, “கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே” என்று சிலம்பில் ஆய்ச்சியர் குரவைப்பாடற்பகுதி ஒன்று அமைந்திருத்தல் காணலாம். இத்தகைய தமிழ்ப் பெயர்களாலே திருமால் பேசப்பட்டிருப்பினும் வைணவ நூல்களில் அவனுக்குரிய சிறப்புப்பெயர்களாகப் பன்னிரு திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. அவை கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விட்டுணு, மதுசூதனன், திரிவிக்கிரமன். வாமனன், சிரீதரன், இருடீகேசன், பற்பநாமன், தாமோதரன் என்பனவாம். இவற்றுள் எப்பெயரும் அப்படியே சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை. கேசவன் என்பதன் மொழிபெயர்ப்பாகக் ‘கூந்தல்’ என்பது பரிபாடலில் (3:31-32) காணப்படுகிறது. “இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேதமுதல்வன்” என்பது நற்றிணை கடவுள் வாழ்த்துப்பகுதி. இதற்கு எல்லாப் பொருள்களினுள்ளும் உறைந்து, அவற்றைத் தன்னுள்ளே அடக்கியுள்ள வேதத்தில் உணர்த்தப்படும் முதற்பொருள் என்பது கருத்து. இதுவே ‘நாராயணன்’ என்னும் பெயரின் பொருளுமாகும். “மாதாங்கு தடக்கை” என முல்லைப்பாட்டிலும் (3), “திருஞெமிர்ந்து அமர்ந்த மார்பன்” எனப் பரிபாடலிலும் (1:8) வருவன சிரீதரன் என்னும் பெயரின் பொருளைத் தருவன. “திருவின் கணவ” (பரி.3:90) என்பது மாதவனைக் குறிக்கும். “நீர்செல நிமிர்ந்த மாஅல்” (முல்லைப்.3) என்பது திரிவிக்கிரமன், வாமனன் ஆகிய திருப்பெயர்கள் இறைவனுக்கு அமைந்த வகையைச் சுட்டுகின்றது. “நீலநிற உருவின் நெடியோன்கொப்பூழ், நான்முகன் ஒருவற் பயந்தபல் இதழ்த் தாமரைப் பொகுட்டின்” என்று பெரும்பாணாற்றுப்படையில் வருவது (402-405) பற்பநாபன் என்னும் பெயர்க்காரணத்தைத் தெரிவிக்கின்றது. “எவ்வயினோயும் நீயே” என்பது (பரிபாடல் 4:70) விட்டுணுவின் எங்கும் பரந்த தன்மையைக் குறிக்கிறது. “கோவலன்” என்பது (பரிபாடல் 3:83) கோவிந்தன் என்னும் பெயரைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். பன்னிருதிருநாமங்களுள் மற்றைப்பெயர்களான மதுசூதனன், இருடீகேசன், தாமோதரன் ஆகியவற்றின் பொருளைக் காட்டும் தொடர்கள் சங்கப்பாடல்களிற் காணப்படவில்லை. |