6.0 பாடமுன்னுரை |
உலகப் படைப்புக் குறித்துப் பேசுவோர் அதற்குக் காரணங்களாக உள்ளவற்றைத் தத்துவங்கள் என்று குறிப்பிடுகின்றனர். சைவர்கள், உலகம் முப்பத்தாறு தத்துவங்களால் ஆகியது என்பர். உலகம் இருபத்து நான்கு தத்துவங்களால் ஆகியது என்பது வைணவர் கொள்கை. இவற்றோடு உயிர், இறைவன் ஆகிய இரண்டையும் சேர்த்து இருபத்தாறு தத்துவங்கள் என்று கூறும் வைணவ சமயம் கருத்துகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. அர்த்தபஞ்சகம் பற்றியும் ரஹஸ்யதிரயம் பற்றியும் வைணவ சமயம் கூறும் தத்துவ விளக்கமும் இப்பாடத்தின் பிற்பகுதியில் இடம் பெறுகின்றது. |