தேம்பாவணிக் காப்பியத்தை ஆழ்ந்து கற்பவர்கள், இந்நூல் 2.4.1 விவிலியக் கிளைக்கதைகள் விவிலியத்தில் இடம் பெறும் வரலாற்றுக் கதைகள்தேம்பாவணிக் காப்பியத்தில் பலநிலைகளில் எடுத்துரைக்கப் படுகின்றன. விவிலியக் கதைகள், தக்கநேரத்தில் உண்மைகளை வெளிப்படுத்தி, காப்பிய மாந்தரை ஊக்குவிப்பதற்காகவே காப்பியத்தில் கிளைக்கதைகளாக எடுத்துரைக்கப்படுகின்றன. சான்றாக, ஏரோது அரசனுக்குப் பயந்து தெய்வக்குழந்தையை ஊர்விட்டு ஊர் எடுத்துச்செல்ல வேண்டியநிலை, சூசைக்கும் மரிக்கும் மனச்சோர்வைத் தருகிறது. அப்போது உடன்வரும் வானவர்கள் இறைவனின் பேராற்றலையும் இறைநீதியின் பெருவன்மையையும் விவிலியக் கதைகள் வழியாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ● மோயீசன் கதை எகித்து அரசன் பாரவோன் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இசுரவேலரைப் பலவாறு கொடுமை செய்தான். மக்கள் அல்லற்பட்டு அழுதனர். அப்போது இறைவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டு, மோயீசன் என்னும் ஒரு தலைவனை உருவாக்கினார். அவன் கையில் ஒரு கோலையும் தமது ஆற்றலையும் வழங்கினார். எனினும் பாரவோன் மன்னன் இசுரயேல் மக்களை நாட்டைவிட்டு வெளியே விடவில்லை. அரசனைப் பணியவைக்க, இறைவன் அவர்களுக்கு வெப்பமிக்க இரத்தம், தவளை, உண்ணிகள், ஆலங்கட்டிமழை, செறிந்த இருள் முதலிய ஒன்பது துன்பங்களையும் இறுதியில் பத்தாவதாக எகித்தியரின் தலைப்பிள்ளைகளின் இறப்பையும் கட்டளையிட்டார், பிறகுதான் பாரவோன் மன்னன் அவர்களை விடுவித்தான். இந்த வரலாற்றை விரித்துரைத்து வானவர்கள், திருக்குடும்பத்தினருக்கு ஊக்கமூட்டுகின்றனர். ● சேதையோன் கதை மேலும் வானவர்கள், சேதையோன் என்ற மாவீரனின் வெற்றி வரலாற்றைச் சூசைக்கு விளக்கிக் கூறுகின்றனர். உழவனாகிய சேதையோன், இறைவனின் மக்களை அவர்தம் பகைவர்களிடமிருந்து மீட்க, இறைவன் தெரிந்து கொண்ட ஒரு தளபதி. முதலில் இறைத்தூதனின் அழைப்பை ஐயுற்ற அவன், பின்னர் இறைக்கட்டளையை ஏற்றுக் கொண்டு, தன் மக்களை ஒன்று திரட்டினான். பகையரசரும் ஒன்று திரண்டனர். அவர்களது படையின் பெருக்கமோ அளவிட முடியாதவை. எனினும் இறைவன் செய்த திருவிளையாடலால் சேதையோனுக்கும் அவன் பின்னின்ற யூதருக்குமே வெற்றி கிட்டியது. 32,000 வீரரைத் திரட்டினான். இதனைக் கண்ட இறைவன் 'யான் வெல்வதற்கு இவ்வளவு படை தேவையா?' என எண்ணினார். "போருக்கு அஞ்சுவோர் நீங்கிச் சினம்மிக்க வீரர் மட்டும் நிற்பாராக” எனக் கட்டளையிட்டார். அவருள் 10,000 பேர் நின்றனர். மீண்டும் "ஆற்றின் நீரை நாவால் நக்கி உண்போர் நீங்க, கையால் அள்ளிப் பருகுவோர் நிற்க" எனவும், 3000 பேர் அணி வகுத்தனர். எதனையும் திருவிளையாடலாக நடத்தும் தேவன் போருக்குரிய வேல் எதுவும் இன்றி, ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளம், ஒரு மண்பானை, ஒரு விளக்கு ஆகியவற்றைக் கொடுக்குமாறு கூறினார். மூன்று அணியாகப் பிரிந்து பகைவரின் இடத்திற்கு ஓசையின்றிச் சென்றனர். தீபத்தை மறைக்கப் பானையைப் பயன்படுத்தினர். பகைவரிடம் சென்று எக்காள ஒலி எழுப்பிப் பானைகளை உடைத்ததும், திடுக்கிட்டெழுந்த பகைவர் தடுமாறினர். தங்களைத் தாங்களே பகைவரெனக் கருதி, இரு படைத்தலைவரும் அழித்துக் கொண்டனர். ● யோசேப்பு கதை இவ்வாறே, சித்திரக்கூடப் படலத்தில், சூசை முனிவர்களுக்கு விளக்கிக் கூறிய யோசேப்பு எனப்படும் ஆணழகன் வரலாறு, நம் உள்ளத்தைக் கவரும் நல்ல கதையாகும். தன் சொந்த சகோதரர்களாலேயே பகைக்கப்பட்டான். துன்புறுத்தப்பட்டான். எனினும் அவனது உண்மை, நேர்மை, தூய்மை, இறைப்பற்று முதலியவற்றால் உயர்நிலையை அடைந்தான். இறுதியில் தன்னைப் பகைத்து அழிக்க முயன்ற சகோதரர்களையே காப்பாற்றும் இறைத் தொண்டன் ஆனான் அந்த ஆணழகன். இவ்வாறு பல்வேறு கிளைக்கதைகளாக, விவிலியக்கதைகள் காப்பியத்தில் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் இறைவனின் அளவிட முடியாத கருணையை எடுத்துக்காட்ட விளக்கப்பட்டன. 2.4.2 விவிலியக் கோட்பாடுகள் விவிலியக் கதைகள் மட்டுமன்று, விவிலிய உண்மைகள் -கொள்கைகள்-கோட்பாடுகள் முதலியனவும் காப்பியத்தில் நன்கு விளக்கப் பெறுகின்றன. சான்றாக விவிலியத் திருமறையின் வழிநின்று, இறைவனின் இயல்புகளைக் காப்பிய ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். சூசையின் வாய்மொழியாக, இறைவனின் ஆறு பண்புகளை எடுத்தியம்பும் பாடல் இதோ
(தன்வயத்தாதல் - தானே தனித்து இயங்குதல்.
முதலிலனாதல்
(மின்னல்லால் - மின்னலைத்தவிர, திருநாள் - பரிசுத்தமான
(ஆரணி - அருமையான ஆபரணமே, ஓச்சும் - ஆட்சி |