தன் மதிப்பீடு : விடைகள் : I

5) பத்றுப் போரைப் புலவர் எவ்வாறு வருணிக்கிறார்?

பத்றுப்போரில், முசுலீம்களோடு எதிரிகள் போரிட்டது
கடலைக் கடல் எதிர்த்துப் போரிடுவது போலவும்,
யானையோடு யானை போர் செய்வது போலவும், நீரோடு
நீர் பொங்குவது போலவும், தீயில் காற்றுப் புகுந்தது
போலவும் இருந்தது. மேலும் தலைகள் உருண்டன; இரத்தம்
பாய்ந்தோடியது; கைகள் அறுந்தன; கால்கள் பெரிய மரம்
போல வீழ்ந்தன; தோள்கள் இரத்தத்தில் மூழ்கின;
பெருவெள்ளத்தோடு பெருவெள்ளம் புகுந்தது போலவும்
தீயில் புயற்காற்று நுழைந்தது போலவும் போர் நடந்தது
என்று வருணிக்கிறார் புலவர்.

முன்