- இப்பாடத்தில் நம்பியகப் பொருள் நூல், ஆசிரியர் பற்றி
அறிந்து கொள்ள
முடிந்தது.
- அகப்பொருள் களவு, கற்பு என்று இரண்டு ஒழுக்கங்களை
(கைகோள்) உடையது என அறிய முடிந்தது.
- தமிழர்களின் களவு வழிப்பட்ட மணம்
வடமொழியாளர்களின் காந்தருவ மணத்தை ஒத்தது
என்ற
தெளிவு கிட்டியது.
- கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று
நான்கு வகைப்படும் என்பது
தெரிகிறது.
- களவிற்குரிய கிளவித் தொகைகள் பற்றிய விளக்கங்களைப்
பெற முடிந்தது.
- பழந்தமிழர்களின் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையை
எதிர்நோக்கியே அமைந்திருந்ததை
விளங்கிக் கொள்ள
முடிகிறது.
|