மக்கள் இனம் முதலில் தோன்றிய நிலப்பகுதியாகத் தென்னகம் |
|
|
உலகில் இன்று ஏறத்தாழ 3000 மொழிகள் உள்ளன. இவற்றுள் எழுத்து வடிவம் கொண்டன 250 அளவினவே. இன்று அறியப் படும் மொழிகளுள் விரல்விட்டு எண்ணத் தக்க சிலவே காலப்பழமையும் இலக்கிய வளமையும் உடையன. அவை உயர் தனிச்செம்மொழிகள் என்று பாராட்டப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாகத் தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனையவை வடமொழி, கிரீக்கு, இலத்தீன், ஈபுரு, சீனம் ஆகியனவாகும். இவற்றுள் ஈபுரு, வடமொழி, இலத்தீன் ஆகியவை வழக்கு ஒழிந்து விட்டன. எத்தனையோ மொழிகள் உருச்சிதைந்து அடையாளம் காணமுடியாமல் ஆகிவிட்ட நிலையிலும், பழைமைக்குப் பழைமையானதாயும், புதுமைக்குப் புதுமையானதாகவும் தமிழ் விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கிலுள்ள உலகமொழிகளில் தமிழே முதன்மையானது என்று இந்தியக் கலைக் களஞ்சியம் மொழிகிறது. திருத்தந்தை சேவியர் தனிநாயகம் அவர்கள் தமிழின் கன்னித்தன்மையைப் பாராட்டி, “தமிழ் கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகியன போல் ஓர் உயர்தனிச் செம்மொழியாக விளங்குகிறது. ஆனால் தன்னையொத்த பல மொழிகள் உருத்தெரியாமல் மறைந்தொழியவும், தமிழ் இன்றும் பேச்சுமொழியாக நிலைபெற்றுள்ளது. ஒரு பழைமையான உயர்தனிச் செம்மொழி இன்றளவும் இளமையோடு நிலைபெற்றிருத்தலுக்குத் தமிழே ஒரே சான்றாக விளங்குகிறது” என்று கூறுவதனை நோக்குக. |
|
|
வின்சுலோ என்ற அகராதி இயல் அறிஞர் தமிழ் சொல்வளத்திலும், பயன்பட்ட தன்மையிலும் கிரேக்கத்தை விடவும், இலத்தீனை விடவும் சிறந்த மொழி என்று பாராட்டியுள்ளார். |
ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்த தொல்திராவிட மொழிக்கும் மூத்த உறுப்பினராகத் தமிழ் விளங்குகின்றது. இந்தியா முழுவதும் பேசப்பட்ட பழந்தமிழையே தொல்திராவிட மொழி என்று மொழியறிஞர்கள் குறிக்கின்றனர். கோலாமி, பர்ஜி, நாய்க்கி, கோந்தி, கூய், குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குரூக், பிராகூய் என்று பற்பல பெயர்களுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தமிழோடு உறவுடைய திராவிட மொழிகள் வழங்கி வருகின்றன.
என்று பெ. சுந்தரம்பிள்ளை பாராட்டுவது சரியானதே. வடஇந்திய |