இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
• |
பல்லவர் கால நிலையையும், அக்காலக் கட்டத்தில்
எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள் பற்றிய
செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.
|
• |
பல்லவர் காலத் தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக்
கூறுகளையும், முந்தைய காலத் தமிழ்மொழி
வழக்கிலிருந்து பெயரியல் மாறும் விதங்களையும் சில
சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
|
• |
இலக்கணக் கூறுகளில் ஒன்றான வினைச்சொற்களின்
பல்வேறு வகைகள் பல்லவர் காலத் தமிழில் வழங்கும்
முறைகளைப் பற்றிய சொல்லியல் குறித்த செய்திகளை
நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
|
• |
மொழி காலத்திற்கு ஏற்ப மாறிவரும் தன்மை உடையது
என்பதால், சொற்கள் எங்ஙனம் பொருள் மாற்றம்
அடைகின்றன என்ற சொல்லாட்சி பற்றிய கருத்துகளையும்
நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
|
|