அந்தாதி
இலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது 6.2.1 அபிராம பட்டர் சோழநாட்டுத்
திருக்கடவூரில் பிறந்தவர், மன்னரும் பட்டரும் |
![]() |
அந்நாளில்
தஞ்சையில் அரசாண்டவர் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசி. காவிரிப்பூம்பட்டினத்திற்குச் சென்று புகார் முகத்தில் (காவிரியாறு கடலில் கலக்கும் இடம்) |
குளித்துவிட்டு மீண்டவர்,
திருக்கடவூரில் தங்கினார். வழக்கம்போல் அங்குத் தங்கிய மன்னர் அபிராமியைத் தொழுது வெளியேறும்போது சந்நிதியில் பட்டரைக் கண்டார். யோகநிலையினை எய்தியவராகக் தோன்றிய அன்னாரைக் கண்டபின் அருகே இருந்தவர்களை அழைத்து இவர் யாவர் என வினவினார். அருகே வந்தோர் மன்னருவடைய
கேள்விக்கு, இந்த |
மன்னன் சரபோசி, பட்டரைப் பற்றிச் சிரத்தை கொள்ளாது சென்றாலும், பட்டருடைய மாட்சிமை மிகுந்த தோற்றம் அவர் உள்ளத்தே பதிந்து கிடந்தது. மன்னன் படுத்துத் துயில் |
கொள்ளும்போது ஒரு கனவு கண்டார். முழுநிலவு உதயமானது போலவும், தேவி அபிராமியம்மை தான் அணிந்திருந்த திருத்தோட்டைக் கழற்றி வீசி அருள, அது (அந்நாளில்) அமாவாசை இருட்டில் சுடர் விட்டுத் தண்ணிலவு பொழிந்து சந்திரன் போல விளங்கவும், அபிராம பட்டர் அவ்வமயம் அருகேயிருந்து முழுமதி வீசி அருளுவதைப் போலவும் கண்டார். தாம் கண்டது கனவாகிலும்கூட, அம்பிகையின் தரிசனத்தை ஒருவாறு பெற்றமையால் மகிழ்ச்சி மேலிட விழித்தெழுந்தார். அபிராம பட்டரின் உண்மைச் சிறப்பையுணர்ந்து, அவர் இல்லிற்குச் சென்று மன்னித்தருள வேண்டினார். பட்டருக்கு விளைநிலங்கள் பலவற்றை இரண்டாம் சரபோசி மன்னர் தானமாகக் கொடுத்தார். பாசபந்தத்திற்கு அப்பாற்பட்ட பட்டர் இணங்காவிடினும் மீண்டும் வற்புறுத்தி நிலங்களை அவருக்கு வழங்கினார். அம்பிகையின் திருவருளைப் பெற்ற அபிராம பட்டர் நூறு பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்தார். கள்ளவாரணப் பிள்ளையார் பதிகம், அபிராமியம்மைப் பதிகம்; அமுதகடேசர் பதிகம் ஆகியவற்றையும் இவர் பாடினார். |
பின்னர்ப் பட்டர் தாம் கூறியது தவறு என்று எண்ணி வருந்தி, அபிராமி வல்லியே இதனின்று என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அவள் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் சென்று, அரிகண்டம் பாடத் தொடங்கினார். அரிகண்டம் என்றால் என்ன? நூறு கயிறுகளைக் கொண்டு உறி ஒன்று கட்டப்படும். அதன் கீழே தீக்குழி ஒன்று அமைத்து எரி ஊட்டப்படும். அந்த உறியின் மேல் இருந்து தனது தெய்வத்தைக் குறித்து வேண்டிப்பாடுவது மரபு. பாடும்போது அத்தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க வேண்டும். அருள் கிடைக்காவிட்டால் ஒரு பாடல் பாடி முடித்ததும் ஒரு கயிற்றை வெட்டிவிடுவர். இவ்வாறு எல்லாக் கயிறுகளும் வெட்டப்பட்டால் புலவர் தீக்குழியில் விழுந்து உயிர் துறப்பார். அதற்கும் முன்பாகத் தெய்வம் அருள் செய்வது மரபு. பட்டர் இவ்வாறாக உறி கட்டி 'உதிக்கின்ற' எனத் தொடங்கும் பாடலை முதலாக வைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு எழுபத்து எட்டுப் பாடல்கள் பாடி முடித்ததும்; எழுபத்து எட்டுக் கயிறுகள் அறுக்கப்பட்டன, அடுத்து 'விழிக்கே அருள் உண்டாம் அபிராம வல்லிக்கு' (79) என்று பாடத் தொடங்கும் போது அம்பிகை எழுந்தருளித் தனது திருத்தோடு ஒன்றை வானமண்டலத்தில் கழற்றி வீசியருள, அது சந்திரனைப்போல் ஒளி வீசியது. அம்பிகை பட்டரை நோக்கி “நீ கவலைப்பட வேண்டாம், நீ கூறிய வார்த்தையை மெய்யாக்கி விட்டோம்” என்று கூறி மறைந்தருளினாள்.
திருத்தோடு வானத்தில் எழுந்தருள, மன்னன் |