2.1 ஆற்றுப்படையின் சிறப்பு |
அரசர்
அல்லது வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவன், பரிசு பெற
விரும்பும் மற்றொருவனுக்கு வழிகாட்டுவதே ஆற்றுப்படையின் பொது
இலக்கணம் ஆகும். இதனை,
|
“பெற்ற
பெருவளம் பெறாஅர்க்கு
அறிவுறீஇ” என்று
தொல்காப்பியம் கூறுகிறது (பொருள், புறத்திணை, 88).
|
பரந்த உள்ளம்
|
'யாம்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
என்னும் பரந்த
உள்ளம் கொண்டவர்கள் பாணர்கள். வறுமையால் வாடிய
தாங்கள்
பரிசு பெற்று வறுமை நீங்கியதைப் போலவே வறுமையுற்ற பிறரும்
பரிசு பெற்று வறுமை நீங்கி மகிழ்வுடன்
வாழ வேண்டும் என்று
பாணர்கள் நினைத்தனர்.
|
இடம் பெறும் செய்திகள்
|
சிறுபாணாற்றுப்படையில் முதல் 40 அடிகளிலும்
விரிவாகப்
பாலை நிலம், விறலியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. |