தமிழ் வாசகர்களால் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்
சுஜாதா. இவர் தமிழில் அறிவியல் கதைகள் எழுத
முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய
அறிவியல் புதினம் என் இனிய இயந்திரா. இந்தப் பாடம்
சுஜாதாவை அறிமுகம் செய்து அவர் எழுதிய என் இனிய
இயந்திரா என்ற புதினத்தின் மூலம் அவருடைய அறிவியல்
பார்வை, பாத்திரப்படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை
விளக்குகிறது.
|