தமிழ்
இலக்கிய வரலாற்றில் உரைநடையின் பங்கு மிகுதி.
பழைய
இலக்கியங்களின் விளக்கமாகவும்
கருத்துகளைத் தெளிவுபடுத்தும்
வகையிலும் உரை விளங்குகிறது. பொதுவாக உரை என்பது செய்யுள்
நூல்களுக்கு (commentary) உரைநடையில்
தரப்பட்ட விளக்கம்.
உரைநடை என்பது செய்யுள் வடிவில் அமையாத
இலக்கியம்
(Prose). ஆகவே, உரைகளைப் பற்றியும், உரைநடையின்
தோற்றமும்
வளர்ச்சியும் பற்றியும் இப்பாடத்தில் படிக்கலாம். |