தன் மதிப்பீடு - II : விடைகள்

4.

உ.வே.சா. தம் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி
சுந்தரம் பிள்ளை மீது கொண்டிருந்த அன்பை
எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?

“காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும்
இவர் பால் உள்ளன என்பதை இவரைக்
கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும்
இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும்
அவைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும்
ஆழ்ந்த கடலைப்போல, அறிவின் விசித்திர சக்தி
எல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம்
அடங்கியிருக்கும்     தோற்றம் உடையவராய்
இருந்தார்”.

குருவின் மீது கொண்ட மிகுந்த பக்தியினால் இப்புலவர் பிரான், இத்தமிழ்க்கவிஞர்     என்று
குறிப்பிடுவாரேயொழியப் பெயரைச் சொல்லிக்
குறிப்பிடுவதில்லை.

முன்